districts

img

தாராபுரத்தில் ரேக்ளா போட்டி: துள்ளி குதித்து சென்ற காளைகள்

தாராபுரம், ஜன. 23- தாராபுரம் அருகே நடைபெற்ற ரேக்ளா போட்டியில், துள்ளி குதித்து சென்ற காளைகளை ஏராளமான பொது  மக்கள் சாலை நெடுக நின்று கண்டு களித் தனர். தாராபுரம் ரேக்ளா கிளப் மற்றும் விவ சாயிகள் இணைந்து நடத்திய 10 ஆவது  ஆண்டு ரேக்ளா போட்டி நல்லம்மை நகர்  சுங்கத்தில் காலை முதல் மாலை 6  மணி வரை நடைபெற்றது. 200 மீட்டர்  மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடை பெற்ற இப்போட்டிகளில் கோவை,  திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த  262 அணிகள் பங்கேற்றன. நேர ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெற்ற  போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 200 மீட்டர் போட்டிகளை தாராபுரம் நல்லம்மை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் வேணு கோபால் கொடிய சைத்து துவக்கி வைத்தார். 300 மீட்டர்  பந்தயங்களை நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்து தொடங்கி வைத்தார். நேரம் அடிப்ப டையில் நடைபெற்ற இப் போட்டிகளில் 200 மீட்டர் பிரிவில் அங்கி தொழுவு சதீஷ்குமார், கொண்டரசம்பாளையம் கர்ணன் ஆகியோர் முதலிடம் பெற்ற னர். புளியமரத்துப்பாளையம் விக் னேஷ் அப்பாதுரை, குருப்பநாயக்கன் பாளையம்  விக்னேஷ்பாபு ஆகியோர்  இரண்டாம் பரிசு பெற்றனர். ரெட்டி யார்பாளையம் யுவராஜ் மூன்றாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் தங்க காசுகள் பரிசு களாக வழங்கப்பட்டது.