ஈரோடு, நவ. 13- வரலாறு தெரியாமல் எதிர்கால சவால் களை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பி னார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் சார்பில் ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மீரா உசேன் அவுலியா தர்ஹாவில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளில் கல்வியறிவுக் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் பங்கேற்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொது செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், கூறிய தாவது, விடுதலை இந்தியாவில் கல்வி, உணவு, வேலை கிடைக்க வேண்டும் என்ற பகத்சிங் தனது 23ஆவது வயதில் தூக்கிலிடப் பட்டான். மக்களாட்சியின் அடையாளம் என் பது கல்வி அரசின் பொறுப்பில் தரப்படுவது. ஒரு நாட்டில் அந்நியனிடமிருந்து விடுதலை பெற்றிருக்கலாம். அல்லது உள்நாட்டில் மன் னனைத் தூக்கி எறிந்து மக்களாட்சி மலர்ந்தி ருக்கலாம். எந்த வகையில் மக்கள் உரிமை யைப் பெற்றிருந்தாலும் அந்த நாட்டின் அர சாங்கம் குறைந்தபட்சம் கட்டணமில்லாமல் கல்வியைக் கொடுத்தது என்பதுதான் வர லாறு. ஆனால் இந்தியாவில் வெட்கமேயில் லாமல் பொருளாதார நிலை சரியில்லை என் றது. அதனால் அம்பேத்கார் அப்படியே விட வில்லை. சோசலிச பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒரு ஆட்சி அமைந்தால் எதெல்லாம் செய்ய முடியுமோ, அந்த கூறு களை வழிகாட்டும் பிரிவில் சேர்த்தார். 2024 தேர்தலுக்குப் பிறகு நம் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு அரசு பள்ளி, கல் லூரி இருக்குமா, இருக்காதா என்பதுதான் முக்கியமான கேள்வி. பல்கலைக் கழக மானி யக்குழு உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பலவீ னப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்குத் துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம். இதன் தொடர்ச் சியிலிருந்து தான் பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையைப் பார்க்க வேண்டும்.
வளாகம் இல்லாத பள்ளி, கல்லூரி வேண் டும் என்கிறது. வளாகம் இருந்ததால் தான் மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கூடுவார்கள். எனவே வளா கம் இல்லாவிட்டால் அனைத்தும் வணிகம யம் ஆகிவிடும். டிஜிட்டலில் போய்விடும். எனவே, இவற்றையெல்லாம் விவாதிப்ப துதான் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளில் மிக மிக முக்கியமான பணி. எனவே, ஏகாதிபத்தியம் மீண்டும் வலிமை பெற்றிருக்கும் சூழலில் மதங்களைக் கடந்து வர்க்கமாக அணி திரள்வோம். பாவேந்தர் சொன்னதைப் போல போரில்லா சமூகத்தை நோக்கி செல்ல வேண்டும். கெட்ட போரிடும் சமூகத்தை வேரோடு சாய்க்க வேண்டும். பொதுவுடைமை தத்துவத்தை திசையெட் டும் சேர்க்க வேண்டும் என்றார். முன்னதாக, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசுகையில், இந் தியாவை நீடித்து ஆள வேண்டுமானால் பிரித் தாளும் சூழ்ச்சியைக் கையாள வேண்டும் என்று பிரிட்டிசார் முடிவு செய்தனர். எதிர்த்த வர்களை தூக்கில் போட்டு அச்சத்தை உரு வாக்கினர். வரலாறு காணாத அடக்குமுறை மக்களை ஊமைகளாக்கியது. பிரித்தாளும் கொள்கைளை தீவிரமாக அமுலாக்கினார். ஆர்எஸ்எஸ்ன் கருவை வெள்ளையர்கள் தான் உருவாக்கினார். ஆஸ்எஸ்காரர்கள் இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மறைந்து வாழ்ந்தார்கள். 2014ல் நடைபெற்ற மிகப் பெரிய அரசியல் திருப்பத்தில் மோடி அதிகாரத்திற்கு வந்தார். எவரொருவரையும் ஏற்றுக் கொள்கிற பண்பு தான் இந்தியாவின் பண்பு. பகைவனுக்கும் அருளும் இந்த மண் ணில் நேரெதிரான கருத்தை அவர்கள் திட்ட மிட்டே கட்டியமைத்தார்கள். விடுதலை இந்தி யாவில் இதற்கு முன்பு அரசியல், பொருளாரா தார, சமூக வாழ்வு இதுபோல அச்சத்திற்குள் ளாக்கப்படவில்லை. இன்று ஆட்சியாளர்க ளாலயே உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
உதா ரணம் தேர்தல் கமிசன். வரும் 4ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா வரு கிறது. அந்த மசோதா நிறைவேறுமானால் வெற்றிபெற்றவரை தோற்று போனார் என்று அறிவிக்க முடியும். எனவே, மிகுந்த எச்சரிக் கையோடு ஒன்றுபட்டு நின்று நாம் நம்மை தற் காத்துக் கொள்ள போராடுவதற்குரிய கடைசி களம் 2024. எனவே, எதிர்காலம் இந்தியா காப் பற்றப்பட ஒன்றுபட்ட நிலையில் நின்று ஒரு ஜனநாயக அரசியலமைப்பு இந்தியாவில் நிலைக்க வேண்டும், நீடிக்க வேண்டும் என் பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண் டும் என்றார். முன்னதாக, கருத்தரங்கிற்கு மாநில உதவித் தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸாரத் தலி வரவேற்றார். முன்னதாக இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள், குழந்தைகளுக்கு அஞ்சலியும், கண்டனமும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப் பட்டன. நிறைவாக போட்டித்தேர்வு இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஏ.ஹாத் திம்தாய் நன்றி கூறினார்.