districts

img

புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ரயில் மறியல்

திருப்பூர், ஜூலை 10- அடிப்படை உரிமைகளை பறிக்கும் புதிய குற்றவியல் சட்டங்களை நடை முறைப்படுத்துவதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிராக சமஸ்கி ருதத்தில் பெயர் வைத்திருப்பதை கண் டித்து  புதனன்று திருப்பூர் மாவட்ட வழக் கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத் தில் ஈடுபட முயற்சித்தனர். மத்திய அரசு குற்றவியல் நடை முறை சட்டத்தையும், இந்திய சாட்சிய சட் டத்தையும், இந்திய தண்டனைச் சட்டம்  ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கி ருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்த மக்கள் விரோத ஒன்றிய  அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டத் தில் பணியாற்றக்கூடிய வழக்கறிஞர் கள் கடந்த எட்டு நாட்களாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து பல்வேறு வித மான போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக புத னன்று திருப்பூர் மாவட்டம் மற்றும் தாலுகா வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு  புதிய குற்றவியல் சட்டங்களை அமல்ப டுத்துவதை நிறுத்தக் கோரியும், சமஸ்கி ருதத்தில் பெயர் வைத்ததை கண் டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட முயன்றனர். அப்போது காவல்து றையினர் வழக்கறிஞர்களை தடுத்து நிறுத்தினர். இதைதொடர்ந்து 100 க்கும்  மேற்பட்ட வழக்கறிஞர்கள் ரயில் நிலை யம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து  கண்டன முழக்கங்களை எழுப்பினர். திருப்பூர் மாவட்ட பார் அசோசியே ஷன் தலைவர் கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தமயேந்தி, உடுமலை  பார் அசோசியேஷன் தலைவர் மனோ கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அட்வகேட்  அசோசியேசன் தலைவர் பூபேஷ், திருப் பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சுப்புராஜ், காங்கேயம்  பார் அசோசியேஷன், பல்லடம் பார் அசோசியேஷன், ஊத்துக்குளி பார் அசோசியேஷன், மடத்துக்குளம் பார்  அசோசியேஷன் உட்பட திருப்பூர் மாவட்டம் மற்றும் தாலுகா வழக்கறி ஞர்கள் திரளானோர் பங்கேற்றனர்.