districts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு

சேலம், ஜூன் 28- ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று சட் டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சேலம் வழக்கறிஞர்கள் வெள்ளி யன்று 2 ஆவது நாளாக நீதிமன்ற புறக்கணிப் பில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களை  திரும்பப்பெற வேண்டும். வழக்கறிஞர்களின்  பாதுகாப்பை ஒன்றிய, மாநில அரசுகள் உத் தரவாதப்படுத்த வேண்டும். காவல் துறையி னருக்கும், வழக்கறிஞர்களுக்கிடையே உள்ள மோதல்போக்கை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, 2 ஆவது நாளாக  வெள்ளியன்று சேலம் நீதிமன்றத்தில், தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் போராட் டத்தால் பொதுமக்களின் வழக்குகள் அதிகள வில் நிலுவையில் சேர்ந்துள்ளன. மேலும்,  அஸ்தம்பட்டி பகுதியிலுள்ள மாவட்ட நீதி மன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.