திருப்பூர், பிப்.16- கார்ப்பரேட்டுகளின் நலன் காக்க அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டி வதைப்பதுடன், மக்களைப் பிளவுபடுத் துவதற்கு வகுப்புவாத அரசியலை முன் னெடுக்கும் ஒன்றிய மோடி அரசுக்கு எதி ராக திருப்பூர் மாவட்டத்தில் ஆறு மையங்களில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டங்களில் தொழி லாளர்கள், விவசாயிகள் பெருந்திர ளாக பங்கேற்று கைதானார்கள். தொழிலாளர்களுக்கு நாடு முழு வதும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 26ஆயிரம் வழங்க வேண்டும், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நீக்க வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத் தபடி குறைந்தபட்ச ஆதார விலை நிர் ணயச் சட்டம் இயற்ற வேண்டும், மின் சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்ப டுத்த தேவையான நிதி ஒதுக்க வேண் டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து குறைந்த பட்சம் ரூ.600 உறுதி செய்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைப் பாது காக்க வேண்டும் என இந்திய மக்களின் அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கை களை வலியுறுத்தியும், மக்கள் விரோத, தேச விரோத, தொழிலாளர், விவசாயி கள் விரோத ஒன்றிய அரசை தோற்க டிக்கவும் நாடு தழுவிய போராட்டத்தை தொழிலாளர், விவசாயிகள் சங்கங்கள் அறைகூவல் விடுத்தன. அதன்படி பிப்.16 வெள்ளியன்று திருப்பூர் மாவட் டத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, உடுமலை, தாராபுரம் ஆகிய ஆறு மையங்களில் வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடத்தப் பட்டது.
திருப்பூர்:
அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட் டம் நடைபெற்றது. சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.குமார் தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து பேரணியாக சென்று திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த முற் றுகை போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநகர, மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிசந்திரன், காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், சிஐடியு சார்பில் மாவட்டத்தலை வர் சி.மூர்த்தி, துணைத் தலைவர் உண்ணி கிருஷ்ணன், ஏஐடியுசி சார்பில் என். சேகர், ஐஎன்டியுசி சார்பில் அ.சிவசாமி, எச்எம்எஸ் சார்பில் ஆர்.முத்துசாமி, எல் பிஎப் சார்பில் ஜி.பாலசுப்ரமணியம், எம் எல்எப். சார்பில் மு.சம்பத் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உட்பட் 1000க்கும் மேற்பட்டோர் இந்த முற் றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட னர். இதையடுத்து காவல் துறையினர் இவர்களைக் கைது செய்தனர். உடுமலைபேட்டை: உடுமலை மத்திய பேருந்து நிலை யத்தின் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு எல்பிஎப் சங்கத் தலை வர் நாகமாணிக்கம் தலைமை வகித் தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனண், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செய லாளர் அ.பஞ்சலிங்கம், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சசிகலா, கனகராஜ், உடு மலை நகரச் செயலாளர் தண்டபாணி, சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஸ் வநாதன், எல்லம்மாள் மற்றும் எஐடியுசி சங்கத்தின் செளந்தர்ராஜ், ஐஎன்டியுசி சங்கத்தின் கந்தசாமி, குப்புராஜ், திரா விட முன்னேற்ற கழகத்தின் உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி நிர்வா கிகள் இளங்கோ, ஜெயராஜ், எம்எல்ப் சங்கத்தின் ஈஸ்வரன் மற்றும் அங்கன் வாடி சங்கத்தின் சித்ரா, விவசாய சங்கத் தின் பாலதண்டபாணி, ராஜகோபால், உடுக்கம்பாளையம் பரமசிவம், மாற் றுத்திறனாளிகள் சங்கத்தின் மாலினி, முத்துக்குமார் வாலிபர் சங்கத்தின் தமிழ், ராமசாமி உள்ளிட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத் தில் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல மடத்துக்குளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக் குளம் தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப்பன் தலைமையில், நால்ரோடு பகுதியில் மறியல் போராட்டம் நடை பெற்றது.
தாராபுரம்:
தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியூ மாவட்ட உதவித் தலைவர் என். கனகராஜ் தலைமை வகித்தார். எல்பிஎப் நிர்வாகி துரைசாமி, திமுக நகரச் செய லாளர் முருகானந்தம், ஏஐடியூசி நிர் வாகி ரகுபதி மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள் பட 185 பெண்கள் 83 ஆண்கள் என மொத்தம் 268 பேர் மறியலில் ஈடு பட்டு கைதாகினர். கைது செய்யப்பட்ட வர்கள் தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டு மாலை விடுதலை செய் யப்பட்டனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி பேருந்து நிலையத் தில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று விஜயமங்கலம் சாலையில் உள்ள பரோடா வங்கி முன்பு மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், ஏஐடியுசி பனியன் சங்க செயலா ளர் ஈஸ்வரன், ஐஎன்டியூசி தலைவர் சுப் பிரமணியம் ஆகியோர் தலைமை வகித் தனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் ஜெ.கந்தசாமி, தமிழ் மாநில விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் வி.பி.பழனிசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதில், 80 பெண்கள் உட்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவிநாசி:
அவிநாசி தபால் அலுவலகம் முன்பு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி. முத்துசாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐ டியு அவிநாசி பொது தொழிலாளர் சங் கச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் அ.சண்முகம், சிஐடியு அவிநாசி நிர் வாகிகள் பழனிசாமி, ராஜன் வேலுச் சாமி, கனகராஜ், செல்வி, சித்ரா, சிஐடியு அங்கன்வாடி சங்கம் சார்பில் வளர்மதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேலு சாமி ,குமாரசாமி, கருப்புசாமி, விவ சாய தொழிலாளர் சங்கம் முருகேஷ், ஏஐடியுசி மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட நிர்வாகி இசாக், கோபால் அவி நாசி நிர்வாகிகள் சண்முகம், நாசர், கன கராஜ், உள்ளிட்டு பலர் கலந்து கொண்ட னர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 200க் கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட னர்.
பல்லடம்:
பல்லடம் நகரில் மத்திய தொலை பேசி அலுவலகம் முன்பாக சிஐடியு ஏஐ டியுசி தொழிற்சங்கங்கள் சார்பாக மறி யல் போராட்டம் நடைபெற்றது போராட் டத்திற்கு சிஐடியு மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்க செயலாளர் ஒய்.அன்பு, ஏஐடியுசி நிர்வாகி ஜி.ரவி ஆகி யோர் தலைமை தாங்கினர். சிஐடியு தொழிற்சங்க சார்பாக பல்லடம் பகுதி பொறுப்பாளர்கள் ஆர்.பரமசிவம், ஆர். பாலன், பி.ஆர்.ராஜேந்திரன் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக தமிழ்நாடு விவசாய சங்கத் மாவட்ட துணை தலைவர் வை. பழனி சாமி ஆகியோர் பங்கேற்றனர். பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பிருந்து புறப் பட்டு ஊர்வலமாக பல்லடம் பேருந்து நிலையம் முன்பாக வந்து சாலை மறி யல் செய்தனர். காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.