districts

img

உழைப்பாளர் தின பேரணி

நாமக்கல், மே 2- மே தினத்தில் தொழிலாளர் கள் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார் பில் 136 ஆவது மே தின பேரணி  நாமக்கல் கொசவம்பட்டி நால்  ரோட்டிலிருந்து துவங்கி அண்ணா சிலை வழியாக வந்து பூங்கா சாலையில் பொதுகூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, சிஐ டியு மாவட்ட தலைவர் எம்.அசோ கன் மற்றும் ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ். ஜெயராமன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஏஐடியுசி மாநில துணை தலைவர் என். பெரியசாமி, சிபிஎம் மாவட்ட செய லாளர். எஸ்.கந்தசாமி, நாமக்கல் சிபிஐ நகர செயலாளர் சுந்தரம், சிஐடியு மாவட்ட செயலாளர் என்.வேலுசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி. தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவிநாசி

தொழிலாளர் தினத்தை முன் னிட்டு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு, ஏஐடியுசி அமைப்புகளின் சார்பில் உழைப்பாளர் பேரணி துவங்கியது. இப்பேரணியானது அவிநாசி பழைய பேருந்து நிலை யம், சேவூர் சாலை வழியாக சென்று மேற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட திடலை வந்தடைந்தது. இதில் சிஐ டியு பனியன் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், விசைத்தறி தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, விவசா யிகள் சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடா சலம், மாதர் சங்க செயலாளர் தேவி, ஏஐடி யுசி பூண்டி நகரச் செயலாளர் ராமசாமி, ஏஐ டியுசி பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி பி.ஆர்.நடராஜன், ஏஐடியூசி நிர்வாகிகள் சண்முகம், கோபால், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னூர்

அன்னூர் விநாயகர் கோயில் திடலில் சிபிஎம் சார்பில் உழைப்பாளர் பேரணி துவங் கியது. இப்பேரணியானது அவிநாசி சாலை  ஏ.எம்.காலனி போன்ற பல்வேறு வீதிகள் வழியாக ஓதிமலை ரோடு பொதுக்கூட்ட திடலை வந்தடைந்தது. இதில் சிபிஎம் சிங்கா நல்லூர் நகரச் செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றிய செயலாளர் முகம்மது முசீர் , பேரூ ராட்சி கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்

சிபிஎம், சிஐடியுவின் சார்பில் தாரா புரத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரியார் சிலை அருகி லிருந்து துவங்கி பேரணியானது உடுமலை ரோடு, பெரிய கடைவீதி வழியாக சென்று அண்ணா சிலை முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து கி.மேகவர்ணன் தலைமை யில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ஆர்.மது சூதனன், என்.கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.