districts

கோவை முக்கிய செய்திகள்

சாலையில் தவறவிட்ட பணப்பையை  எடுத்துக் கொடுத்தவருக்கு பாராட்டு

நாமக்கல், டிச.6- குமாரபாளையத்தில் சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியார் பள்ளி காவல ருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஈரோட்டைச் சேர்ந்த மகேந்திரன் (35) என்பவர், தனியார் மின்சாதன பொருட்கள் கடையில், விற்பனை செய்த பொருட் களுக்கு பணம் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் வியாழனன்று குமாரபாளையம் பகுதிக்கு வசூல் செய்வ தற்காக வந்துள்ளார். பவானியில் இருந்து குமாரபாளை யத்திற்கு சேலம் - கோவை புறவழிச்சாலை காவிரி பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது  தனியார் பள்ளி அருகே வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கும் பொழுது வண்டியில் மாட்டிருந்த ரூ.95 ஆயிரம் பணப்பை தவறி சாலையில் விழுந்துவிட்டது. இதனை கவனிக்காமல் அவரும் சென்று விட்டார். சிறிது தூரம் சென்ற  பின் வண்டியில் பணப்பை இல்லாத கண்டு அதிர்ச்சிய டைந்து, இதுகுறித்து தான் பணியாற்றும் நிறுவனத்திடம் கூறி யுள்ளார். தொடர்ந்து பவானி காவல் நிலையத்தில் புகார் தெரி வித்துள்ளார். இந்நிலையில் தனியார் பள்ளியில் காவலாளி யாக பணியாற்றும் ஈஸ்வரன் (55) என்பவர் அவ்வழியாக சென்ற பொழுது கீழே பணப்பைக் கிடப்பதை பார்த்துள் ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடன் கூற அவர்கள்  குமாரபாளையம் காவல் நிலையத்தில் பணப்பையை ஒப்ப டைத்தனர். இதனையடுத்து பணப்பை உரிமையாளரான மகேந்திரனுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரிடம் பணப்பை ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக பணத்தை காவல் நிலை யத்தில் கொண்டு வந்து கொடுத்த தனியார் பள்ளி காவலாளி ஈஸ்வருக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரி வித்தனர்.

சிறுதானியங்களால் கிடைக்கும் பலன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சேலம், டிச.6- சிறுதானியங்களை உண்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே பிரபல சமையல் கலை ஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தி வருவது அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.

சேலம் மாநகரில் இயங்கி வரும் பிரபல நட்சத்திர விடுதி யில் தலைமை சமையல் கலைஞராக இருப்பவர் டாக்டர். ஆட்டோ கே.நாகராஜன். சமையல் கலையில் முனைவர் பட் டம் பெற்ற இவர், பள்ளி மாணவர்களுக்கு தானியங்களை உண்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி  வருகிறார். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தானியங் களை பயன்படுத்துவதும், அதை உண்பதும் குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருவது அனைவரின் பாராட் டையும் பெற்றுள்ளது. இதன்ஒருபகுதியாக சேலம் மாநகரில் செயல்படும் கிளேஸ் ப்ரோக் என்ற தனியார் பள்ளியில் சமை யல் கலைஞர் சாமை தானியத்தில் செய்த நூடுல்ஸ் உணவு பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள் ளது.

போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

சேலம், டிச.6-
பெரியார் பல்கலைக்கழகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், பெரியார் பல்கலைக்கழக குடிமை யியல் பணித் தேர்வு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம்,  மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்துடன் இணைந்து, எதிர் வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 4 மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கான நான்கு  மாதகால இலவச பயிற்சி வகுப்புகள் பெரியார் பல்கலைக் கழகத்தில் டிச.10 ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. இப் பயிற்சியில் சேர்ந்து பயிலும் மாணாக்கர்களுக்கு தேர்வு  குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப் படும். இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1 மணி வரையும் பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரையும், சனிக்கிழமை களில் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1 மணி வரை யும் பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரையும், ஞயிற்றுகிழமைகளில் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறும். பெரியார் பல்கலைக்கழக நூல கத்தின் இரண்டாவது தளத்தில் செயல்படும் குடிமையியல் பணித் தேர்வு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து  பயன்பெறலாம். மேலும், விவரங்களை பெற 97893 19722 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப் பட்டுள்ளது.

குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத  கோவை மாநகராட்சி கல்வி அலுவலர்

கோவை, டிச.6- ஆசிரியர் பெருமக்கள் தங்களது விடு முறையை மாநகராட்சி ஆணையரின் நேரி டையான ஒப்புதலைப்பெற்றே விடுமுறை எடுக்க வேண்டும் என்கிற கோவை மாநக ராட்சி கல்வி அலுவலரின் சுற்றறிக்கைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டச் செயலாளர் ப.வீராச்சாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. கோவை மாநகராட்சி கல்வி அலுவலரால் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில் அனைத்து வகை  விடுப்புக்கும் ஆசிரியர்கள் மாநகராட்சி ஆணையாளரை நேரடியாக சந்தித்து அனு மதி பெற்று விடுப்பு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அடிப்படை விடுப்பு விதிகளுக்கு முரணானது. விடுப்பு விதிகள் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட  இல்லாமல் சுற்றறிக்கை அனுப்பி இருக்கக் கூடிய மாநகராட்சி கல்வி அலுவலரை தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த சுற்றறிக்கையை கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் உடனடியாக திரும்பப் பெற  வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லை என்றால், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கோவை மாவட்டம் மையத்தின்  சார்பில் மாநகராட்சி கல்வி அலுவலரைக்  கண்டித்து மாபெரும் கண்டன இயக்கங் களை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெல்லம் விலை உயர்வால் மகிழ்ச்சி!

நாமக்கல், டிச.6- பில்லிகல்பாளையம் ஏல சந்தையில்,  வெல்லம் விலை உயர்ந்து காணப்பட்டதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டாரத்தில் ஜேடர்பாளையம், சோழசிரா மணி, கபிலர்மலை, பாண்டமங்கலம் உள் ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில்  கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை ஆலை உரிமையா ளர்கள் வாங்கி வந்து, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர்  அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக மூட்டைகளாக கட்டி, பில்லிகல்பாளையத் தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு  வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஏலம் எடுத்து செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1220 வரையிலும் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1230 வரையிலும் ஏலம் போனது.தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ஏலத் தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1280 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1340 வரையிலும் ஏலம் போனது.  தேவை அதிகரிப்பு, நெருங்கும் பொங்கல்  பண்டிகை உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

சேலம், டிச.6- சேலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ரா.ராஜேந்திரன் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் கூறுகையில், மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கான தேவைகள் மற்றும் சிகிச்சைகள்  குறித்து நோயாளிகளிடம் கேட்டறியப்பட் டது. அதேபோன்று, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, நோயாளிகளின் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவர் கள், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார் கள் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. தேவையான அனைத்து மருந்து, மாத்திரைகள் அனைத்தும் போது மான அளவு இருப்பில் உள்ளதாக மருத்துவர் கள் தெரிவித்தனர். எனவே, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பான நிர்வாகத்தோடு செயல்பட்டு வருகிறது, என்றார். இந்த ஆய் வின்போது, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ. தேவி மீனாள், மருத்துவக் கண்காணிப்பாளர் ரா.ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அணைகள் நிலவரம் (வெள்ளிக்கிழமை)

பவானிசாகர் அணை
நீர்மட்டம்:98.92/105அடி
நீர்வரத்து:3865கனஅடி
நீர்திறப்பு:2100கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:68.50/72அடி
நீர்வரத்து:680கனஅடி
நீர்திறப்பு:1097கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:142.60/160அடி
நீர்வரத்து:41.78கனஅடி
நீர்திறப்பு:404.74கனஅடி
ஆழியார் அணை 
நீர்மட்டம்:113.70/120அடி
நீர்வரத்து:379கனஅடி
நீர்திறப்பு:457கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:46.04/60அடி 
நீர்வரத்து:813கனஅடி
நீர்திறப்பு:748கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்:88.49/90அடி
நீர்வரத்து:451கனஅடி
நீர்திறப்பு:451கனஅடி