districts

img

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

நாமக்கல், நவ.5- சாகித்ய அகாதமி, பால புரஸ் கார் விருது பெற்ற எழுத்தாளர் கா. உதயசங்கருக்கு தமுஎகச சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறார்களுக்கான நாவல்கள், கவி தைகள், பாடல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு நூல்கள் என 162 புத்தகங்க ளுக்கு மேல் எழுதியவர் கா.உதய சங்கர். தற்போது ஆதனின் பொம்மை  என்ற நூலுக்காக இந்திய அரசின் சாகித்ய அகாதமி பெற்றார். மேலும், இவர் பால புரஸ்கர் விருதும் பெற் றுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வரும் கா.உதயசங்க ருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா சனியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோர்ப்பாளையம் ஸ்ரீ வித்யா பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பி. முத்துசாமி வரவேற்றார். தொடர்ந்து எழுத்தாளர் உதயசங்கரின் “படைப் பும் பகிர்வும்” என்ற தலைப்பில் எழுத் தாளரும், பேராசிரியருமான சர்மிளா தேவி உரையாற்றினார். “ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தாங்களாம்” என்ற தலைப்பில் கதை சொல்லி  சரிதா ஜோ, மாணவ, மாணவிகளுக்கு கதை சொன்னார். இதையடுத்து எழுத் தாளர் கா.உதயசங்கருக்கு பள்ளி யின் தாளாளர் மற்றும் தலைமையா சிரியர் ஆகியோர் பாராட்டு தெரி வித்து, பரிசு வழங்கினர். முடிவில், எழுத்தாளர் கா.உதயசங்கர் ஏற்புரை யாற்றினார். இதில் தமுஎகச மாவட்ட துணைத்தலைவர் க.கோபி உட்பட 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். தமிழாசிரியை கே.நித்யா நன்றி கூறினார்.