districts

img

ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டு

அவிநாசி, டிச.29- வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோருக்கு ஞாயிறன்று பாராட்டு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வேலா யுதம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக சாந்தி வேலுச்சாமியும், துணைத்தலைவராக விஜயலட்சுமி ஜெயராஜ் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஜன.5 ஆம் தேதியோடு நிறைவடை கிறது. வேலாயுதம்பாளையம் ஊராட்சி கிராமப் பகுதி களில், பொதுமக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, சாலை, சாக்கடை, குடிநீர் போன்றவை ஏற்பாடு செய்து  கொடுத்துள்ளனர். இந்நிலையில், சின்னகருணை பாளையம், கருணைபாளையம், காசி கவுண்டம்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் ஞாயிறன்று பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகி யோருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த னர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.