ஈரோடு, மே 7- என்சிசி செயல்பாடுகளுக்காக பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பட்டது. பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடை பெற்ற ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம்கள் மற்றும் துப்பாக்கி சுடும் முகாமின் நிறைவு விழாவுக்கு என்.சி.சி. இயக்குநரகத்தின் (தமிழ்நாடு, பாண்டிச்சேரி & அந்தமான் நிக்கோபார்) துணை இயக்குநர் ஜெனரல், கமோடோர் அதுல் குமார் ரஸ்தோகி தலைமை வகித்தார். குரூப் கமாண்டர் கர் னல் பிவிஎஸ் சிவராவ், முகாம் தளபதி கர்னல் ஜெய் தீப் மற்றும் துணை முகாம் கமாண்டன்ட் லெப்டினன்ட் கர்னல் எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை குழு வெற்றி கோப் பையையும், மதுரை குழு பின் தொடர்ந்தோர் கோப்பையை யும் வென்றன. தலைமை விருந்தினரால், சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களுக்கான தனிப்பட்ட பதக்கங்கள் வழங்கப் பட்டன. மேலும் கல்லூரி வளாகத்தில் என்சிசி பயிற்சி, சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டு செயல்பாடுகள் மற்றும் பல் வேறு என்சிசி பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததற்காக கல்லூரிக்கு தலைமை விருந்தினரால் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ மற்றும் முதல்வர் முனைவர்.வி.பாலுசாமி ஆகியோர் பாராட் டுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர், தாளாளர், முதல்வர் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து கல்லூரியின் துப்பாக்கி சுடும் தளத்தின் தடுப்பு சுவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.