districts

img

பாலபுரஸ்கர் விருதாளர் உதய சங்கருக்கு பாராட்டு

கோவை, ஆக. 6- சாகித்திய அகடமியின் 2023க்கான பாலபுரஸ்கார் விருது பெற்ற உதய சங்க ருக்கு, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் கோவை  மாவட்ட குழு சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் நடை பெற்ற பாராட்டு விழாவிற்கு, தமுஎகச மாவட்டத் தலைவர் தி. மணி தலைமை ஏற்றார். இதில், உதய சங்கர்  படைப்புகள் குறித்து எழுத்தாளர் இரா.முருகவேல்,  பேரா சிரியர். ராம்ராஜ் , எழுத்தாளர் சரிதா ஜோ ஆகி யோர் உரையாற்றினர்.  தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம்,  எழுத்தாளர்கள் மு.ஆனந்தன், மீ.உமா மகேஷ்வரி ஆகியோர் வாழ்த்தி உரையாற் றினார். இதனைத்தொடர்ந்து, உதய சங்கரின் கதையை தழுவி மதுமிதா குழு வினர்களின் நாடகம் , குழந்தைகளின் கதை  சொல்ல நிகழ்வும் நடைபெற்றது. எழுத்தாளர் உதய சங்கர் ஏற்புரையாற்றினார்.  முன்னதாக, சக்தி பில்டர்ஸ் உரிமை யாளர் மாரியப்பன் அவர்களுக்கான பாராட்டு  நிகழ்வு நடைபெற்றது.  நிகழ்வுக்கு கவிஞர்  ச.பிரியா வரவேற்புரையும்,  விஷ்ணு நன்றி யுரை வழங்கினார். நிகழ்வில் எழுத்தாளர். சா. பாலமுருகன், எழுத்தாளர் ஷர்மிளா தேவி, பேராசிரியர் கந்தசுப்பிரமணியம், கவிஞர் சைத்தம்பி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர்.