districts

‘குரங்கு பெடல்’ இயக்குநருக்கு பாராட்டு

உடுமலை, ஆக.28- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் இயக்குநருக்கு, உடுமலையில் பாராட்டு விழா நடைபெற்றது. அண்மையில் வெளியான ‘குரங்கு பெடல்’ திரைப் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு பாராட்டு விழா, உடுமலை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார் பில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.பிரகாஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தொல்லியல் ஆய் வறிஞர் மூர்த்தீஸ்வரி பேசுகையில், குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டியதையும், அதுவும் 1975, 80 கால  கட்டங்களில் பெண்களுக்கு சைக்கிள் கொடுக்க மாட் டார்கள் என்றும், இந்த குரங்கு பெடல் திரைப்படத்தில் பெண் சைக்கிள் ஓட்டுவது போன்று வைத்திருப்பது மிக வும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது, என் றார். இயக்குநர் கமலக்கண்ணன் ஏற்புரையாற்றுகை யில், குழந்தைகள் திரைப்படங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும். அந்தக்காலத்தில் ஒரு நாள், இரண்டு நாள் குழந்தைகள் வீட்டுக்கு வராவிட்டாலும், குழந்தைகளைப்பற்றி அச்ச உணர்வு இல்லாமல் பாது காப்பு இருந்ததைப் பற்றியும், தற்போது குழந்தைகள் பள் ளியை விட்டு காலம் தாழ்த்தி வந்தாலே அச்சமாக இருப்ப தையும் குறிப்பிட்டு பேசினார். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் கொண்டு போய்விட்டு அழைத்து வருவதையும், அந்தக்காலத்தில் குழந்தை களே பள்ளிக்குத் தன்னிச்சையாக, தன்னம்பிக்கை யோடு சென்று வந்தனர். எவ்வளவு பணம் சம்பாதித்தா லும் குழந்தைகள் குறித்தான அச்ச உணர்வும், பய  உணர்வும் ஒவ்வொரு சராசரி மனிதனின் உள்ளத்திலும் இருப்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ இயலாது, என்றார். இதைத்தொடர்ந்து திரைப்பட இயக்குநர் கமலக் கண்ணனுக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின்  சார்பிலும், புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பி லும் பாராட்டு தெரிவிக்கபட்டது. மேலும், தயாரிப்பாளர் சவிதா சண்கமுகம், நடிப்பு பயிற்சியாளர் நந்தகுமார் ஆகியோருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாகப் பேசிய குழந்தைகளுக்கும், எழுத்தாளர் ஷாஜஹான் ஆகியோருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.