தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர்களில் ஒருவரான மு. ஆனந்தனின் “யுகங்களின் புளிப்பு நாவுகள்” கவிதை நூல் குறித்து 40 ஆளுமைகள் எழுதிய மதிப்புரைகளை கவிஞர் மு.முருகேஷ் “அறத்தின் அழகியல் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா மற்றும் இலக்கிய சந்திப்பு – 241 ஆவது நிகழ்வு ஞாயிறன்று , கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.