districts

img

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதா?

இளம்பிள்ளை, மார்ச் 15- விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற வர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், விவசாய சங்கத்தினர் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் பகுதியிலிருந்து எடப்பாடி அருகே யுள்ள குரும்பபட்டி வரை சுமார் 20 கிலோ மீட் டர் தூரத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக 110 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்ல  உயர்மின் கோபுரங்கள் அமைக்க மின்சார  வாரியம் திட்டமிட்டு நில அளவீடுகள் செய்யப் பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரி வித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்தாண்டு சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. அதில், விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்காமல், சர பங்கா ஆற்றின் கரையோரம் அமைக்க வழி வகை செய்யப்படும் என வருவாய் கோட்டாட் சியர் உறுதியளித்ததையடுத்து விவசாயி கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இந்நிலையில், திங்களன்று விவசாய நிலங் களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க மின் சார துறையினர் ஏற்பாடுகள் செய்தனர். இத் தகவலறிந்ததும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர். இதற்கிடையே முன்னாள் வருவாய் கோட் டாட்சியர் உறுதியளித்ததன்படி, சரபங்கா நதி கரையோரமாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் புதனன்று சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்பொ ழுது அங்கு குவிக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், விவசாயி களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் திற்குள் நுழைய தடை விதித்ததுடன், போராட் டத்திற்கு அனுமதி மறுத்ததால் விவசாயிகள் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி கூறுகையில், கடந்தாண்டு வருவாய் கோட் டாட்சியர் உறுதியளித்ததன்படி, சரபங்கா நதி யோரம் உயர் மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் நிலத்தடி கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் உயர்மின் கோபு ரங்கள் அமைப்பதற்கு எதிரான இயக்கம் அல்ல. ஆனால், விளை நிலத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்பவர்கள், என்றார். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமை ஏற்றார். இதில், மாநில துணைத்தலைவர் பி.பெரு மாள், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, எடப்பாடி தாலுகா தலைவர் அய்யந் துரை, செயலாளர் ஜெயவேல், கொங்கணா புரம் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், தலை வர் ஏழுமலை உட்பட திரளான விவசாயி கள் கலந்து கொண்டனர்.