districts

கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை; பரபரப்பு

சேலம், ஜூன் 7- கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை  மேற்கொண்டு, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள  கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி  அலுவலராக கோபிநாத் என்பவர் பணியாற்றி  வந்தார். அப்போது கருங்கலூரைச் சேர்ந்த  ஒப்பந்ததாரர் குமார், வட்டார வளர்ச்சி அலுவ லர் கோபிநாத் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். அதன்பேரில் கோபிநாத் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை  எதிர்த்து கோபிநாத் சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த  வழக்கில், சிபிசிஐடி போலீசார் உரிய விசா ரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்த ரவிட்டது. அதனடிப்படையில் வியாழனன்று சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்கா ணிப்பாளர் தலைமையில் நான்கு பேர் கொண்ட போலீசார் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை கொளத்தூர் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அதில், 2015 ஆம் ஆண்டு கோபிநாத் பணி யாற்றியபோது இருந்த ஆவணங்களை சிபி சிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். மேலும்,  தற்போது பணியிலுள்ள கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை மற்றும் பணியில் இருந்த ஊழியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.