செல்போன் எண் கேட்டு கல்லூரி மாணவி மீது தாக்குதல்
கோவை, அக்.20- கோவையில் செல்போன் எண் கேட்டு கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த அபிநயஸ்ரீ (20) என்பவர் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு, கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுணா புரம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அபிநயஸ்ரீ- விடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால், அவர் அதை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார். இதன்பின் அந்த வாலிபர் அவரின் செல்போன் எண்ணை கேட்டார். அதற்கு வாலிபரை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே தள்ளி விட்டு மிரட்டி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அபிநயஸ்ரீ, இதுகுறித்து பெற்றோரிடம் கூறினார். இதன்பின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
கோவை, அக்.20- கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்து சுப்பையா கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ஆட்கள் நட மாட்டம் குறைவாக உள்ள பகுதியில் முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் எழுந்துள்ளது. இதனைக்கேட்ட அந்த வழி யாக சென்றவர்கள், முட்புத ருக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. சேலையில் சுற்றப்பட்டு இருந்த அந்த பச்சிளம் குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்கப்பட வில்லை. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆனைமலை போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த போலீசார் குழந் தையை மீட்டு, சிகிச்சைக் காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: அனைத்து பள்ளிகளிலும் பாலியல் புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தல்
கோவை, அக்.20- கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பாலியல் ரீதியான புகார்கள் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்க ளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தைரிய மாக சொல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் போலீசார் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்றங்கள் வெளி வந்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தங்களது பாலியல் புகார்களை தெரிவிக்க அனைத்து பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சார்ந்து புகார் அளிப்பதற்கு புகார் பெட்டி வைக்க வேண்டும். புகார் பெட்டி இரு சாவிகள் கொண்டதாகவும், அதில் ஒன்றினை மூத்த பெண் ஆசிரியரிடமும், மற்றொன்றை மாவட்ட சமூக நல அலுவ லர் அல்லது மாவட்ட இலவச சட்ட ஆணையத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய கண்காணிப்பாளரது தொலைபேசி எண் மற்றும் அலுவலக முகவரி ஆகியவை தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். அந்த பலகையில் குழந் தைகள் உதவி மைய எண் 1098, பள்ளிக் கல்வித் துறையின் உதவி சேவை தொலை பேசி எண் 14417, பெண்கள் உதவி தொடர்பு எண் 181 போன்ற உதவி மைய எண்களும் இடம் பெறுதல் வேண்டும். அனைத்து பள்ளி களிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் உளவியல் ஆலோ சகர் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோ சனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர். வகுப்பு ஆசிரியர் கூட்டம் சீரான கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும், என்றார்.
அம்பேத்கர் படம் அகற்றப்பட்ட விவகாரம்: கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
நாமக்கல், அக்.20- இராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரி யில் முதல்வராகப் பணியாற்றி வந்த டி.பால்கிரேஸ், சில ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அப்போது, அக்கல்லூரி அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் படத்தை அவர் அகற்ற உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பான புகார் அப் போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் சென்றது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர் கமிட்டி முன்னிலையில் ஆட்சியர் விசாரணை மேற் கொண்டு, கல்லூரி முதல்வர் டி.பால் கிரேஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்தார். இதற்கிடையே, நாமக்கல் கவிஞர் ராம லிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரிக்கு அவர் இடமாறுதல் செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு முன் முதல்வராகப் பொறுப் பேற்றார். இங்கும் அவர் மீது பல்வேறு குற் றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப் பட்டது. இந்நிலையில் அம்பேத்கர் படம் அகற்றிய விவகாரத்தில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டி.பால்கிரேஸை கல்லூரி கல்வி இயக்குநரகம் புதன்கிழமை பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்
நாமக்கல், அக்.20- நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படு கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியா ழனன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித் தார். நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா திட்ட விளக்கவுரையாற்றி னார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.19.50 கோடியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன். நாடாளு மன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி, நகராட்சி நிர்வாக இயக் குனர் பா.பொன்னையா, நகராட்சி தலைவர் து.கலாநிதி ஆகியோர் கலந்து கொண் டனர்.
ஒப்பந்த பணியாளர்களுக்கு உடனே போனஸ் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
திருப்பூர், அக்.20- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி மற் றும் நகராட்சிகளில் வேலை செய்யும் 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்கு மாறு சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சி துறை ஊழியர் சங்க செயலாளர் கே.ரங்கராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதி உள் ளார். அதில், தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள், டிபிசி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மிகக் குறைந்த ஊதியம் பெற்று வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும். இதுகுறித்து போராட்டம் நடத்தப்பட்டு திருப்பூர் மாநக ராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகத்தின் மண்டல இயக்கு னர், 5 நகராட்சி ஆணையாளர்கள், கடிதம் எழுதி திருப்பூர் மாந கராட்சியில் 4 ஒப்பந்ததாரர்கள் 5 நகராட்சிகளில் இரண்டு ஒப்பந்தார்கள் ஆகியோர் போனஸ் வழங்க அறிவுறுத்தியுள் ளனர். எனினும் இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்க ளுக்கு உடனடியாக சட்டப்படி போனஸ் வழங்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் கேட்டுக் கொள்வதாக கே.ரங்கராஜ் கூறியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
திருப்பூர், அக். 20 - திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் திருப்பூர் மாநகராட்சி ஆணை யருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருப்பூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குமாறு சிஐடியு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீபாவளிக்கு அவர்களுக்கு உரிய போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை கள் தொடர்பாக, தேவைப்படும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆணை யம் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக கள ஆய்விலும் ஈடுபடும் என குறிப்பிட்டுள்ளது.
போதை மாத்திரை விற்கப்படுகிறதா? மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
அன்னூர், அக்.20- அரசால் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள்(வலி நிவாரணிகள்) விற்கப்படு கின்றனவா? என மருந்தக ஆய்வாளரு டன் இணைந்து போலீசார் ஆய்வு மேற் கொண்டனர். தமிழகத்தில் குறிப்பாக அண்மைக் காலங்களில் கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள், ஸ்டாம்பு போல் இருக்கும் போதை பொருட்கள் வரத்து அதிகரித்து வரு கிறது. இதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிவைத்து இந்த மாத்திரை கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால், இளைஞர்கள், மாண வர்கள் அதிகளவில் போதைக்கு அடிமை யாகி வாழ்க்கையை இழக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறது. இதன் ஒருபகுதியாக மருந்து ஆய்வா ளர்களுடன் (டிரக் இன்ஸ்பெக்டர்) இணைந்து காவல் துறையினர் மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டம், காரமடை காவல் ஆய்வாளர் குமார் மற்றும் மருந்து ஆய்வாளர் ஸ்வர்ணலதா உள்ளிட் டோர் இணைந்து மருந்தகங்களில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மருந்துகள் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லா மல் வழங்கப்படுகிறதா? பள்ளி, கல்லூரி மாண வர்கள் எவரேனும் அடிக்கடி வலி நிவாரணி மருந்து வாங்குகிறார்களா? என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாநகர காவல் துறையின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம்
கோவை, அக்.20- கோவை மாநகர காவல்துறை யினரின் சமூக வலைத்தள கணக்கு களை ஹேக்கர்கள் முடக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாநகர காவல்துறை யினர் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங் களை பயன்படுத்தி வருகின்றனர். கோவை மாநகர போலீஸ் என்ற பெய ரில் தங்களுக்கு என ஒரு கணக் கினை உருவாக்கி அதனை செயல் படுத்தி வருகிறார்கள். இதில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், பல்வேறு மோசடி, பல்வேறு குற்ற செயல்கள் குறித்த வாசங்கள் அடங்கிய விழிப்புணர்வு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்ற னர். மேலும் அது சம்பந்தமான வீடி யோக்களையும் வெளியிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற் படுத்தி வருகின்றனர். இதுதவிர காவல் துறையில் நடக்கும் நிகழ்வு கள், மக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித் தால் அதன் மீது நடவடிக்கை எடுப் பது என பல்வேறு தகவல்களையும் கோவை மாநகர போலீஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரு கின்றனர். இந்த நிலையில் புதனன்று நள்ளி ரவு மாநகர போலீசாரின் டுவிட்டர் கணக்கினை ஹேக்கர்கள் முடக்கி னர். இது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் கிரிப்டோ கரன்சி குறித்த தகவல்களையும், தேவை யில்லாத உரையாடல்களும் பகிரப் பட்டு இருந்தது. வியாழனன்று காலை இதனை பார்த்த மாநகர போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக் கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடமும் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் உடனடியாக மாந கர போலீசாரின் டுவிட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் இறங்கினர். விரைந்து செயல்பட்டு காலை 8.30 மணியளவில் டுவிட்டர் கணக்கை மீட்டெடுத்தனர். கோவை மாநகர போலீசாரின் டுவிட்டர் கணக்கு ஹேக் கர்ஸ்களால் முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடிவேரியில் குளிக்க தடை
ஈரோடு, அக்.20- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் பண்டிகை மற் றும் விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் குளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், சத்தியமங்கலம், கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் பெய்த கன மழையால் பவானியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள் ளது. இதனால், பவானி ஆற் றின் குறுக்கே உள்ள கொடி வேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணி கள் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் 3 ஆவது நாளாக தடை விதிக்கப்பட் டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு
ஈரோடு, அக். 20- உயர வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுள்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். உயர வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுள்றோராக அறிவித்து அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப் பில் சிறப்பு திட்டங்களை உருவாக்கிட வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண் டும். மாவட்ட தலைநகரில் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். அரசு பேருந்துகளில் தாழ்வான படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி உயரம் தடைப்பட் டோர் தினமான வியாழனன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சகா தேவன் தலைமையில் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் பொருளாளர் ராஜு உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
கேஎன்எம் குழும ஆலை தொழிலாளர்களுக்கு 18 சதவிகித போனஸ் உடன்பாடு
கோவை, அக்.20- கேஎன்எம் குழுமத்திற்கு சொந்தமான 6 ஆலைகளில் போனஸ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கேஎன்எம் குழுமத்திற்கு சொந்தமான 6 ஆலைகள் உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். இதில், 2021-2022 ஆண்டிற்கான போனஸ் 18 சதவிகிதம் என சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது. முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் கேஎன்எம் குழும நிர்வாக இயக்குநர்கள் எம்.சந்திரன், கே.எம்.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்க தரப்பில், சிஐடியு சி.பத்மநாபன் மற்றும் ஆர்.இராமகிருஷ்ணன், பி.ஜெகதீசன், ஆர்.ஆறுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.