திருப்பூர், நவ.18- குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாலர் பூங்கா திருப்பூர் மாவட்டக் குழுவின் சார்பில் குழந்தைகள் தின கொண்டாட் டம் மற்றும் திரைப்படம் திரையிடல் நிகழ்வு சின்னக்காளிபா ளையம் வனத்துக்குள் திருப்பூர் அறிவியல் பூங்கா அரங்கத் தில் நடைபெற்றது. பாலர் பூங்கா மாவட்டச் செயலாளர் சந்துரு தலைமையில் ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பாலர் பூங்கா மாவட்டப் பொருளாளர் மேகா வரவேற்றார். அதைத் தொடர்ந்து வடக்கு நகர ஒருங்கிணைப்பாளர் தனுஷ் ஈஸ்வர் போதை எதிர்ப்பு உறுதிமொழியை முன்மொழிந்தார். ஷாலினி அரசியலமைப்புச் சட்டம் உறுதிமொழியை முன் மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். வரலாற்றில் குழந்தைகள் என்ற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து குரங்கு பெடல் திரைப்படம் திரையி டப்பட்டது. கலந்துரையாடல் நிகழ்வில் இந்த திரைப்பட இயக் குனர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். மாநில பொறுப்பாளர் என்.அமிர்தம் சிறப்பு ரையாற்றினார். பாலர் பூங்காவின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் முகிலன் நிறைவுரையாற்றினார். இந்த நிகழ்வுகளில் ஆறு ஒன்றியங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட குழந்தைகளும், ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர். முடிவில் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரேவந்த் நன்றி கூறினார்.