திருப்பூர், பிப்.3- பொங்கலூர் ஒன்றியம், கண்டியன்கோ வில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் திங்களன்று மக் கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பா ளையம் கிளை சார்பில் அளிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி யில் 2020-21 ஆம் ஆண்டு முதல் 2023-24-ஆம் ஆண்டு வரை ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறை கேடு செய்யப்பட்டுள்ளது. எனவே குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். பொன்ராமபுரம் சமுதாயக்கூடத்திற்கு இரவு காவலர் நியமனம் செய்து மாதமாதம் ரூ. 9360 எடுத்து, மொத்தமாக ரூபாய் 2,24,640 முறைகேடு செய்யப்பட்டதை திரும்ப செலுத்த வேண்டும் என தணிக்கைக் குழு வலியுறுத்தியும் இது நாள் வரை திரும்ப செலுத்தாமல் உள்ளார். இப்படி பல முறைகே டுகள் செய்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவிநாசி தாலுகா புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அவிநாசி – பல்லடம் சாலை மாநில நெடுஞ்சாலையில் பள்ளி, மக ளிர் கல்லூரி, பேருந்து நிறுத்தம் என தினந்தோ றும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித் தனர். அதேபோல் வஞ்சிபாளையம் வாரி கார் டன் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என மனு அளிக்கப் பட்டுள்ளது. இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட் டச் செயலாளர் பி.நதியா அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், கண்டியன் கோவில் ஊராட்சிக்குட்பட்ட, மரு துரையான் வலசு பகுதியில் 500க்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தொடர்ந்து பராமரிக்கப்படாமல் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது. மேல் நிலை தொட்டிக்கு அருகிலேயே குடியிருப்பு பகுதியும் உள்ளது. மேல்நிலைத் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் பலி ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர். எனவே உடனடியாக தலையிட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட் டியை அப்புறப்படுத்தி, புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும். இங்குள்ள நீர்தேக்கத் தொட்டியின் மூலம் வழங்கப்படும் ஆழ்குழாய் தண்ணீரில் உப் புத்தன்மை அதிகமாக உள்ளதால் பல்வேறு விதமான உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்ப டுகிறது. உடல்நல பாதிப்புகள் குறித்து பரிசோதித்த மருத்துவர்கள் உங்களுக்கு உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக உள்ளது என்றும், இதற்கு காரணம் நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் தான் என்று கூறுகின்றனர். மேலும், இப்பகுதியில் வசிக் கும் பலருக்கு கிட்னியில் கல் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை குடத்தில் பிடித்து வைத்திருந்தால் இரண்டு நாட் களில் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவ துடன், உப்பு படிமம் மிதக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 33 ஆவது வார்டுக்கு உட்பட்ட கார்த்திக் நகர் கிழக்கில் உள்ள ஓம் சக்தி டையிங்கில் துணிகளுக்கு சாயம் இடு தல் பதப்படுத்துதல் மற்றும் அதைச் சார்ந்த உப தொழில்கள் போன்ற தொழிலை செய்து வருகிறார்கள். இதில் மிக குறைந்த அளவே உள்ள 3 புகை போக்கிகள் மூலம் பகலிலும் இரவிலும் என 24 மணி நேரமும் வெளியேறும் புகை நச்சு தன்மையுடன் சாம்பல் தூசி வெளி யேறுகிறது. இதனால் அயோத்யா நகர், கார்த்திக் நகர், ராஜீவ் நகர், கொளக்காடு தோட்டம், புங்கமர தோட்டம், ராயக் கோட்டை, பாரப்பாளையம் ஆகிய பகுதிக ளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற் குள்ளாகின்றனர். மேலும், இப்பகுதி மக்க ளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகி றது. மேலும், புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நிறுவனத்தை நடத்தும் உரி மையாளர்களிடம், மேலாளரிடம் நேரில் பல முறை கூறியும் எந்த பயனும் இல்லை. தற்போது மிக அதிக அளவில் நச்சு கலந்து வருவதால் குடியிருப்புவாசிகளுக்கு இரு மல், காய்ச்சல், தோல் வியாதி இன்னும் பல உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் தாக்குகின்றன. எனவே உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு அளித்த னர்.