நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி ஆர்.எஸ் பகுதியில் சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மக்கள் புரட்சியின் மகத்தான தலைவர் தோழர் விளாடிமிர் லெனினின் நூற்றாண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அசோகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லட்சுமணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.