தருமபுரி, பிப்.26- பெண் குழந்தைகளை கொண்டாடு வோம் திட்டத்தின் கீழ் தருமபுரியில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப் பட்டது. தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் திட்டத்தின் கீழ், தருமபுரியில் இயங்கும் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 80 மாணவி களுக்கு காவல்துறை மூலமாக கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் துவக்கி வைத்தார். இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆன இளங்கோவன், காவல்துறை கண்காணிப்பாளர் நாகலிங் கம் சிவராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.