அவிநாசி, டிச.7- சேவூர் அருகே கானூ ரில் முஹம்மத் ஷா வலி யுல்லா தர்காவில் மத நல் லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது. அவிநாசி வட்டம், சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இதில் தக்னி சுன் னத் ஜமாத் மஸ்ஜித் முஹம் மத் ஷா வலி தர்கா தமிழ கத்தில் மிகவும் சிறப்புப் பெற்றது. இந்த தர்கா தமிழ் நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக் கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண் டாடப்பட்டு வருகிறது. சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப் பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் ஆகிய பகுதிக ளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்ப குதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டா ரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில், கார்த்திகை தீப திரு நாளன்று அப்பகுதி கிராம மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிட் டனர். இதுகுறித்து தர்கா ஹஜ்ரத், சம்சுதீன் கூறுகை யில், தொழில் விருத்தி, திரு மணம், குழந்தை பாக்கியம் என எந்தவொரு வேண்டு தல் வைத்தாலும் நிறைவேறு வதால் இந்த தர்காவிற்கு சாதி, மதம், இனம் பாரா மல் அனைத்து தரப்பு மக்க ளும் வருகின்றனர். மேலும் கார்த்திகை தீப விழாவின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த் திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத நல்லி ணக்கத்துக்கு சிறந்த உதார ணமாக இந்த தர்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்த னக்கூடு உருஷ் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழி பட்டு செல்கின்றனர், என கூறினார்.