திருப்பூர், மார்ச் 5- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கோவிலுக்குச் சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். காங்கேயம் அருகே உள்ள இலக்குமநாயக்கன்பட்டி யில் அழகேஸ்வரசாமி கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலா கும். இந்த கோவிலுக்கு சொந்தமான 2.96 ஏக்கர் நிலம் வெள்ளகோவிலில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை யில் இலக்குமநாயக்கன்பட்டி ஆண்டிபாளையம் பிரிவில் இருந்து புதுப்பை செல்லும் பாதையில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 15 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து வைத் திருந்தது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. நிலத்தை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு போடப் பட்டது. இதில் நிலத்தை மீட்கும்படி இந்து சமய அறநிலை யத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் வெள்ளியன்று இந்து சமய அறநிலையத் துறை திருப்பூர் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமை யில், தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) கோபாலகிருஷ் ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராம நிர்வாக அதி காரி இந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் சம் பவ இடத்திற்கு சென்று கோவிலுக்கு சொந்தமான 2.96 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என தெரி வித்துள்ளனர்.