districts

img

விவசாயம் செய்வதை கைவிட்ட கம்பனூர் மலை மக்கள்

கோபி, ஆக 20- கோபி அருகே உள்ள கம்பனூர்   மலை கிராம மக்கள் நீண்ட காலமாக  சாலை வசதி கேட்டு காத்திருக் கின்றனர். சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தராததால்  இந்தாண்டு விவசாயம் செய்வதை  கைவிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பளையம் வனபகுதிக்குட்பட்ட பகுதியில் கம் பனூர் மலைகிராமம் அமைந்துள் ளது. நான்கு தலைமுறைகளாக 30க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கம்பனூர்  மலைகிராமத்தில்  மக்களுக்கு அரசு  சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அவர்களது விவசாய நிலத்தில் கம்பு, ராகி, சோளம், திணை, குதிரை வாலி, உள்ளிட்ட தானிய  பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர். அறுவடை செய்த தானியங்களை நகர்புறத் திற்கு  கொண்டு சென்று விற்பனை  செய்து வருகின்றனர். அந்த வரு மானத்தில் குடும்பத்தை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், விவசாயம் செய்து வந்த னர்.  இந்நிலையில், இந்தாண்டு கம் பனூர் மலைவாழ் மக்கள் 40 ஏக்கர்  பரப்பளவில் விவசாயம் செய்வதை  கை விட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கம்ப னூர் மலைகிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை தான். இத னால் மலைவாழ் மக்களுக்கு நோய் வாய்ப்பட்டால் அவசர தேவைக் குக்கூட ஆபத்து காலங்களில் மருத் துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ்  வாகனத்தை அழைத்தால் கூட வாக னம் வரமுடியாத நிலை உள்ளது. மேலும் வனபகுதியிலிருந்து பள் ளிக்கு வாகனங்களை இயக்க யாரும் முன் வருவதில்லை. இத னால் மலைகிராம குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படு கிறது. கம்பனூரில் சாலை வச தியை ஏற்படுத்தி மின்வசதி, வீடு  வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்தி தர வேண்டும் என  மலைவாழ் மக்கள் எதிர்பார்த்துள் ளனர்.  கம்பனூரை சுற்றியுள்ள வன விலங்குகள் அகழியை கடந்து  விவசாய பயிர்களை முற்றிலும் சேதப்படுத்துகிறது. கடன் வாங்கி  முதலீடு செய்து விவசாயத்தை மேற்கொண்டால் வன விலங்குக ளால் ஏற்படும் சேதத்தால் முதலீட் டுக்கு கூட மிச்சமிருப்பதில்லை. எனவே இந்தாண்டும் வனவிலங்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கம்ப னூரில் விவசாயத்தை தொடங்க  வில்லை. இதனால் தங்களது வாழ் வாதாரம் பாதிக்கப்படுவதால், அரசு உதவிட வேண்டும். தேர்தல் வந்தால் மட்டுமே அதிகரிகளும் அரசியல்வாதிகளும் வருகின்ற னர். அவரவர் தேவை முடிந்ததும் கம்பனூர் மலைவாழ் மக்களை ஏன்  என்று கேட்பதற்கு கூட ஆளில்லை.  இதில் முற்றிலும் கொங்கர்பாளை யம் ஊராட்சி சார்பில் அடிப்படை  வசதிகள் ஏற்படுத்தி தருவதில்லை.  எனவே இந்தாண்டு விவசாயம் செய்யவில்லை என முடிவெடுத் துள்ளனர்.