சேலம், செப்.20- விபத்தில் காயமடைந்த கல் லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், “பணத் தைக் கொடுத்துவிட்டு பிணத்தை எடுங்கள்” எனக்கூறிய தனியார் மருத்துவமனை பேசியதை அறிந்து, தனியார் மருத்துவமனை நிர்வா கத்தை கண்டித்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பகுதியைச் சேர்ந்த யஸ்வந் (18) என்ற கல்லூரி மாணவர் விபத் தில் சிக்கி, சேலத்திலுள்ள தரண் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலை யில், சிகிச்சை பலனின்றி வெள்ளி யன்று காலை உயிரிழந்தார். சிகிச் சைக்காக அவரது குடும்பத்தினர் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம் கட்டியுள்ள னர். ஆனால், தற்போது ரூ.3 லட் சத்து 40 ஆயிரம் கொடுத்தால்தான் உடலை தருவோம் என மருத்துவ மனை நிர்வாகத்தினர் மிரட்டியுள்ள னர். மேலும், உயிரிழந்த இளைஞ ரின் உடலை மருத்துவமனையின் பின்புறம், ‘ப்ரீசர் பாக்ஸ்’-இல் கூட வைக்காமல் திறந்தவெளியில் போட்டு வைத்துள்ளனர். இதனை கண்டித்து, உயிரிழந்த மாணவ ருக்கு மருத்துவமனை முன்பு ஈம சடங்கு நடத்தும் போராட்டத்தில் ஈடு பட உள்ளதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவரின் உறவினர்கள் அறிவித்து, மருத்துவ மனை முன்பு குவிந்தனர். இதுகு றித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த சேலம் காவல் துறையி னர் தலையிட்டு, ஒரு ரூபாய் செல வில்லாமல் மாணவரின் உடல் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் வி.பெரியசாமி, கிழக்கு மாநகரப் பொருளாளர் எம். தமிழ்செல்வன், துணைச்செயலா ளர்கள் கே.வீரமணி, தேவி, சிபிஎம் கிளைச் செயலாளர்கள் எஸ்.பிரபா கர், சக்திவேல், வாலிபர் சங்க பன மரத்துபட்டி ஒன்றியத் தலைவர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்ட னர்.