districts

img

சிபிஎம் சேலம் போக்குவரத்து அரங்க செயலாளராக கே.செம்பன் தேர்வு

சேலம், நவ.23- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் போக்குவரத்து அரங்க செயலா ளராக கே.செம்பன் தேர்வு செய் யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் போக்குவரத்து அரங்க இடைக்கமிட்டியின் 11 ஆவது  மாநாடு, தோழர் என்.சங்கரய்யா  நினைவு நுழைவாயில், தோழர் சீதாராம்  யெச்சூரி நினைவரங்கம் உள்ள வி.பிசிந்தன் நினைவகத்தில் சனியன்று நடைபெற்றது. ஆர்.சந்திரன் செங்கொடியை ஏற்றி வைத் தார். எம்.சேகர் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். என்.இளவழகன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் துவக்க வுரையாற்றினார். இடைக்கமிட்டி செயலா ளர் கே.செம்பன் அறிக்கையை முன்வைத் தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கோவிந் தன் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், போக்குவரத்து கழகத்தில் ஒப் பந்த முறையை ஒழிக்க வேண் டும். தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுப்பதை தடுக்க வேண் டும். புதிய பணியாளர்களை உட னடியாக நியமனம் செய்ய வேண் டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்க ளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பலன்களையும், 108 மாத  டிஏவையும் உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்தில் வாரிசு வேலை, கல்வித்தகுதி அடிப்படையில் உடனடியாக  பணிநியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் சேலம் போக்குவரத்து அரங்க செயலாளராக கே. செம்பன் மற்றும் 7 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ நிறைவுரையாற்றி னார். என்.முருகேசன் நன்றி கூறினார்.