திருப்பூர், அக். 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் ஊத்துக்குளி தாலுகாக் குழுச் செயலாளராக கே.சரஸ் வதி தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பல்லக வுண்டம்பாளையத்தில் ஞாயி றன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா 7 ஆவது மாநாடு தோழர் செ.நடேசன் நினை வரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிவசாமி, சசிகலா ஆகியோர் தலைமை வகித்தனர். கே. பிரகாஷ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். வரவேற்பு குழு தலைவர் ஜெ.கந்தசாமி வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உண்ணிக்கிருஷ்ணன் உரையாற்றி னார். தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி மாநாட்டு அறிக்கையை முன் வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ச. நந்தகோபால், ஆர்.குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், ஊத்துக்குளி பேரூராட்சியில் அம்ருத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கவுத்தம்பாளையம் கிராமத்தில், தொன்மை நிறைந்த குமரிக்கல் பகுதி நடு கல்லை பாதுகாக்க வேண்டும். அகழ்வா ராய்ச்சி செய்து தமிழர்களின் பண்பாட்டை வெளி கொண்டு வர வேண்டும். விருதுநகர்- காவுத்தம்பாளையம் உயர் கோபுர திட் டத்தை கைவிட வேண்டும். ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். விபத் துக்கள் அதிகம் நடக்கின்ற பகுதியாக இருப் பதால் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க வேண்டும். செங்கப் பள்ளி நெடுஞ்சாலை பகுதி களில் கடைகளில், ஹோட்டல்க ளில் பேக்கரிகளில் நிற்கும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறான விபத்துகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். ஊத்துக்குளி ஒன்றியத் தில் சமுதாயக் கூடத்தை பட்டியலின மக் கள் இல்ல நிகழ்ச்சிக்கு கேட்கின்றபோது அது ஊராட்சியினுடைய தட்டுமுட்டு சாமான்கள் போடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வரு கிறது என்று தட்டிக் கழிக்கும் நிலை உள்ளது. அந்த சமுதாயக் கூடங்களை முறையாக பரா மரித்து தலித் சமுதாய மக்களுக்கு வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இம்மாநாட்டில் 12 பேர் கொண்ட புதிய தாலுகா கமிட்டியும், ஊத்துக்குளி தாலுகா குழுச் செயலாளராக கே.சரஸ்வதி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் என். சுப்பிரமணியன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். முன்னதாக, கட்சியின் மூத்த தோழர்க ளின் ஜோதியை மாநாட்டு அரங்கிற்கு ஊர்வ லமாக கொண்டு வந்தனர், மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் கே.வெங்கடாச லம் ஏற்றிவைத்தார். முடிவில் வரவேற்பு குழு சார்பில் காமராஜ் நன்றி கூறினார்.