districts

img

கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளை வலியுறுத்தும் அம்பேத்கர்

தருமபுரி, ஏப்.24- விவசாயிகளுக்கான கம்யூனிஸ்ட் களின் கொள்கைகளை புரட்சியாளர் அம் பேத்கரும் வலியுறுத்தி உள்ளார் என தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் கூறியுள்ளார். புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் டி.மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட  தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார். இந்நிகழ்ச்யில் “இந்தியாவின் இன்றைய தேவை மார்க்ஸ் – அம்பேத் கார் – பெரியார்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், இந்தியாவில் வடமாநிலங்களில் நிலப் பரப்பு விரிவடைந்து இருக்கிறது. ஆனால், பகுத்தறிவில் சுருங்கி இருக்கிறது. தென்னிந்தி யாவில் நிலப்பரப்பு சுருங்கி இருந்தாலும், பகுத்தறிவில் விரிவடைந்து இருப்பதாக அம்பேத்கார் கூறினார். அந்த அளவுக்கு பெரியாரின் கொள்கையை தென்னிந்திய மக்கள் பின்பற்றியுள்ளனர்.

கம்யூனிஸ்ட்களின் முறையை வலியுறுத்திய அம்பேத்கர்

தலித் மற்றும் இஸ்லாமியர்களை அம் பேத்கர் ஒப்பிட்டு பேசியுள்ளார். இஸ் லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும், தனி தொகுதியும் வழங்கப்பட்டது. இதனை மேற் கொள்காட்டி அம்பேத்கர் இஸ்லாமியர் களைவிட, தலித் இன மக்கள் சமூக ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தலித்களுக்கு இட ஒதுக்கீடும், தனி தொகுதி யும் வேண்டும் என பேசினார். இஸ்லாமி யர்களுக்கு எதிராக அம்பேத்கர் பேச வில்லை என்பதை திரித்து ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா பிரச்சாரம் செய் கின்றனர். நிலக்குவியலை உடைக்க வேண் டும். நிலமற்ற அனைவருக்கும் நிலம் வழங்க வேண்டும் என கம்யூனிஸ்ட்டுகள் போராடி னர். அம்பேத்கர், அரசு நடத்தும் கூட்டு பண்ணைமுறையை வலியுறுத்தினார். நில  மற்றவர்களுக்கு சாகுபடி செய்யும் நிலத்தை பிரித்து வழங்க வேண்டும். விவசாய இடு பொருட்களை அரசே வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களை அரசே கொள் முதல் செய்யவேண்டும் என்ற கம்யூனிஸ்ட் களின் முறையை அம்பேத்கரும் வலியு றுத்தினார்.

சொத்துக்காக பெண் அடிமையாக்கப்பட்டாள்

தமிழகத்தில் பெரியார் பெண் அடி மைக்கு எதிராக போராடினார். ஏங்கல்ஸ் -  மார்க்ஸ்சும் பெண் அடிமைதனத்துக்கு கார ணம் என்ன? என்பதை விஞ்ஞான பூர்வமாக அணுகி, வரலாற்று பூர்வாக எடுத்துரைத்த னர். காடுகளில் மனிதன் இனக்குழுக்களாக வாழ்ந்தபோது‌ பெண் தலைமையில் தான்  இனக்குழுக்கள் இயங்கியது. மனிதன் தனி  குடும்பமாக மாறும்போதுதான் சொத்துக் காக பெண் அடிமையாக்கப்படுகிறாள்.

அம்பேத்கர் சிலையை சிதைப்பவர்களுக்கு…

உலக நாடுகளில் உள்ள அனைத்து சட் டங்களையும் படித்த அம்பேத்கர் இந்தியா வின் தன்மைககேற்ப சட்டத்தை உருவாக்கி னார். சபையில் 6 மாத விவாதத்திற்கு பின்  1946 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி யன்று அம்பேத்கர் எழுதிய இந்திய அரசி யல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட் டது. இதன்பின் எஸ்சி/எஸ்டி பிரிவினருக் கான இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தி னார். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீடும், பெண்களுக்கு சொத்துரிமை கோரும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அம் பேத்கர் வலியுறுத்தினார். இதற்கு நேரு ஓர் ஆண்டுகாலம் அவகாசம் கோரினார். ஆனால், ஓராண்டு காலத்திற்குபின் இவ்வி ரண்டு சட்டமும் இயற்றப்படாததால், அம் பேத்கர் தனது அமைச்சர்  பதவியை ராஜி னாமா செய்தார். இந்த வரலாறு மக்களுக்கு  முழுமையாக சென்றடைந்தால் அம்பேத்கர் சிலையை உடைக்க மாட்டார்கள். இவ்வாறு கே.சாமுவேல்ராஜ் உரையாற்றினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், திராவிடர் கழக மண்டல தலைவர் கரு.பாலன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலா ளர் ஏ.மாதேஸ்வரன், எஸ்சி/எஸ்டி ஊழி யர் சங்க பொறுப்பாளர் பி.கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ.ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக, தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்ட பொருளாளர் கே. கோவிந்தசாமி நன்றி கூறினார்.