உதகை, அக்.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எருமாடு ஏரியாக் கமிட்டி செயலாளராக கே. ராஜன் தேர்வு செய்யப்பட்டார். எருமாடு ஏரியாக் கமிட்டியின் 6 ஆவது மாநாடு, சேரம்பாடி யில் நடைபெற்றது. டி.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உருப்பினர் கே.காமராஜ் துவக்கி வைத்து உரையாற்றி னார். வேலை அறிக்கையை கட்சியின் ஏரியாக் கமிட்டி செயலாளர் கே.ராஜன் முன்வைத் தார். கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன், செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.யோகன்னான், குஞ்சு முகம்மது ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், கப்பால, அய்யன் கொல்லி, அம் பலழுலா, சேரம்பாடி ஆகிய மருத்துவமனை களில், அனைத்து வசதிகளும் கொண்ட 50 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனைக ளாக மாற்ற வேண்டும், தேவையான மருத்து வர்கள் மற்றும் உழியர்களை நியமனம் செய்ய வேண்டும், மாண் டாடன் செட்டி சமுதாயத்திற் காக ஒதுக்கப்பட்ட சண்ணக் கொல்லி பகுதிக்கான சாலை உடனடியாக சிரமைக்க வேண் டும், அடிப்படை வசதி அனைத் தும் செய்து கொடுக்கவேண் டும், வனவிலங்கு பிரச்சி னைக்கு நிரந்தர திர்வு காண வேண்டும். டேன்டீயை பாது காத்து தொழிலாளர்கள் அனை வருக்கும் வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்கள் அதிகா ரிகள் தலைமையில் கூட்டுறவு தொழில் சாலையாக மாற்றவேண்டும், டேன்டீ தொழி லாளர்கள் குடும்பங்கள்க்கு 1 ஏக்கர் நிலம் மற்றும் வீடுகள் அரசு கட்டி கொடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. மேற்கண்ட தீர்மானங்களை வலி யுறுத்தி தொடர் போராட்டம் நடத்த மாநாட் டில் முடிவெடுக்கப்பட்டது. மாநாட்டில் 15 பேர் கொண்ட ஏரியாக் கமிட்டி தேர்வு செய்யப் பட்டு, எருமாடு கமிட்டியின் செயலாளராக கே.ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.