நாமக்கல், அக்.20- மார்க்சிஸ்ட் கட்சியின் திருச் செங்கோடு ஒன்றியச் செயலாள ராக கே.கதிர்வேல் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருச்செங்கோடு ஒன்றிய 8 ஆவது மாநாடு, ஆஞ்சநேயர் கோவில் வீதியில் அமைந்துள்ள காவேரி நினைவகம், தோழர் கே.நாரா யணன் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. ஆண்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் கட்சி கொடி யினை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப் பினர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலா ளர் ஆர்.மனோகரன் அறிக்கையை முன் வைத்தார். இம்மாநாட்டில், ஆனங்கூர் பகுதி யில் ரயில்வே மேம்பாலம், ஆண்டிபாளை யத்தில் கால்நடை மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு சங் கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்துவர் வருவதை யும், தேவைப்படும்போது அவ சர மருத்துவர் வருவதையும் உறுதிபடுத்த வேண்டும். பரு வமழை தவறியதால் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் திருச்செங் கோடு ஒன்றியச் செயலாளராக கே.கதிர் வேல் மற்றும் 9 ஒன்றியக்குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கணேசபாண்டி யன் நிறைவுரையாற்றினார்.