தருமபுரி, நவ.19- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட் டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி தடுப்ப ணையின் வலதுபுற கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட் டங்களின் வழியாக தென்பெண்ணை ஆறு பாய்கிறது. தருமபுரி மாவட்டத்தில் கே.ஈச்சம் பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் வலது புற கால்வாய் பெரமாண்டப்பட்டி, அம்மா பேட்டை, சாமண்டஅள்ளி, பொன்னாப்பு தூர், கவுண்டம்பட்டி, தொட்டம்பட்டி உள் ளிட்ட கிராமங்கள் வழியாக எம்.வெலாம் பட்டி பகுதி அருகே மீண்டும் தென்பெண்ணை ஆற்றுடன் இணைகிறது. இந்த வலதுபுற கால்வாய் வழியாக மழைக்காலங்களில் உபரி நீர் திறந்து விடப்ப டுவது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் உபரி நீர் கால்வாயில் கடைமடை பகுதி யான எம்.வெலாம்பட்டி வரை செல்லும் போது சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங் கள் பாசன வசதி பெறுகிறது.
இதேபோல் இந்த வலது புற கால்வாயில் தண்ணீர் ஓடும் போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவ சாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறு களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. இந்நிலையில் வலதுபுற கால்வாயில் அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் புதர்கள், செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் சீராக ஓடாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், இந்த கால்வாயில் இறுதியாக தண்ணீர் சென்றடையும் எம்.வெலாம்பட்டி பகுதிக்கு போதுமான அளவில் தண்ணீர் சென்று சேரததால் விவசாய சாகுபடி பணி கள் பாதிக்கப்பட்டுள்ளன. வலதுபுற கால்வாயில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும். அதன் மூலம் கால்வாயில் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல வலது புறகால்வாய்யை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.