திருப்பூர், மே 20 – தீக்கதிர் நாளேட்டின் திருப்பூர் மாவட்ட செய்திப் பிரிவை திருப்பூர் தியாகி பழனி சாமி நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் உழைக்கும் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் தீக்கதிர் நாளேட்டின் கோவை பதிப்பின் ஒரு பகு தியாக திருப்பூர் மாவட்ட செய்திப் பிரிவு தொடங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் நடைபெறுகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று இந்த செய்திப் பிரிவு அலுவல கத்தைத் தொடங்கி வைக்கிறார். இத்துடன், திருப்பூரில் அன்றைய தினம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தோழர் கே.தங்க வேல் நூலகத்தையும் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். இதில், பங்கேற்கும் தீக்கதிர் நாளேட்டின் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் படத்தைத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில், வேலை கொடு கோரிக் கையை முன்வைத்து 3000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. ஐம்பெ ரும் விழாவாக நடைபெறும் இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, தீக்கதிர் எம். கண்ணன், மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன், தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.