விழுப்புரம், ஜன. 4 - செந்தொண்டர் அணிவகுப்பில் பங்கேற்று மாரடைப்பால் உயிரிழந்த ஜி.ஆனந்தனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சிபிஎம் 24ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு செந்தொண்டர் அணி வகுப்பில் பங்கேற்பதற்காக மின்வாரிய ஊழியரான ஜி.ஆனந்தன் விழுப்புரம் வந்தார். அணிவகுப்பில் கலந்து கொண்ட போது திடீரென்று மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உடற்கூறு ஆய்வு முடிவடைந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், என்.குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர் டி.பழனிவேல், மண்டலச் செயலாளர் கே. அம்பிகாபதி, மாநில செயலாளர் எஸ்.கண்ணன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர், கோட்டச் செயலாளர் அருள், பொரு ளாளர் ஏழுமலை உள்ளிட்டோர் ஆனந்தன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.