தருமபுரி, அக்.22- வசதியற்ற பிரிவினருக்கு வழங்கப்படும் நேர்மையான மற்றும் அர்த்தமுள்ள தீர்ப்பின் மூலம் நீதி நிலை நிறுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத் தில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் மற் றும் மாவட்ட சட்டப்பணிகள் சேவை மையம் சார்பில், ஞாயிறன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவருமான எஸ்.வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் செயல் தலைவர் என்ற முறையில் இங்கு வந்துள் ளேன். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையத்தின் முதல் குறிக்கோளே, வசதியற்ற பிரிவினருக்கு நேர்மையான மற்றும் அர்த்த முள்ள நீதியை வழங்குவதாகும். அதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் மையமானது, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியின் கீழ் இயங்கும் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்து வதே ஆகும். தேவைப்படும் சட்ட உதவிகள் அனைத்தும் தகுதியுள்ள நபர்களுக்கு இல வசமாக செய்து கொடுக்கப்படும். சட்ட உதவி கோருபவர்கள் எழுத படிக் கத் தெரியாதவர்களாக இருப்பின், அதற் கான உதவிகளை சட்ட ஆணையமே செய்து வருகிறது. இங்குள்ளவர்களுக்கு சட்ட உதவி ஏதேனும் தேவைப்பட்டால், இங்குள்ள சட் டப்பணிகள் ஆணையத்தையோ அல்லது குழுவையே தொடர்பு கொண்டால், அது நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, உங்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளும் இலவசமாக வழங்க ஆவண செய்யப்படும். இலவச சட்ட உதவிகள் வழங்குவது மட்டும் எங்கள் பணி அல்ல. அரசாங்கத்தின் மற்ற உதவிகள் உங்க ளுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்வதும் எங்கள் பணியாகும். ஒவ்வொரு மாவட்டத்தி லும் ஒவ்வொரு வட்டத்திலும் இலவச சட்ட உதவிகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் நசீர் முகமது, தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதி யுமான மணிமொழி, தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிபதி ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவ லர் அப்பள்ள நாயுடு உட்பட பலர் கலந்து கொண்டனர்.