சேலம், ஜூலை 4- மற்ற துறைகளில் உள்ளவர் கள் போல, ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு மருத் துவ காப்பீடு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஓய்வு பெற் றோர் அமைப்பு சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. போக்குவரத்து கழக நிர்வாகம் 103 மாத டிஏ உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வுபெற்ற வர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.
இதர துறைகளைப் போல, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு மருத்துவ காப்பீடு திட் டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு களை மதித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக் கையை ஏற்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பு சார்பில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
சேலம் ராமகிருஷ்ணா சாலை யில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகத்தை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்கள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் பி.என்.பழனிவேலு தலைமை வகித்தார். இதில், சங்கத் தின் பொதுச்செயலாளர் எஸ்.அன் பழகன், மாநில துணைத்தலை வர் கே.குப்புசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணன், டி. ராஜேந்திரன், பொருளாளர் அழகே சன் உட்பட ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.
இதேகோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக சேலம் பணி மனை முன்பு, சிஐடியு செயலாளர் லியாகத் அலி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், விரைவு போக்குவரத்து சங்க மாநில துணைப் பொதுச்செய லாளர் முருகேசன், துணைத்தலை வர் செல்லப்பன், போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சங்க மாநில நிர்வா கிகள் மணிமுடி, சி.பி.வாசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோன்று, கோவை மண் டலம் சார்பில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமையகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஒய்வூபெற் றோர் நல அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மண் டலச் செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். எஸ்இடிசி ஜெயராமன், சுரேந்திரன், கோவை மண்டல பொதுச் செயலாளர் பி. செல்வராஜான் சேதுராமன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை மண்டல ஓய்வூ தியர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட னர்.