districts

மூன்று, நான்கு.., ஐந்து....ஆண்டுகள்! ஜவ்வாய் இழுக்கும் திட்டப்பணிகள்

திருப்பூர், பிப்.7 - திருப்பூர் மாநகராட்சியில் பாதா ளச் சாக்கடை மற்றும் குடிநீர்த் திட் டப் பணிகளை முழுமையாக முடிப் பதற்கு மூன்றாண்டுகள் என கால நிர்ணயம் செய்யப்பட்டு பின்னர் ஓராண்டு கூடுதல் கால அவகாசம் பெற்று நான்காண்டுகளில் முடிக் கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இன் னும் பணி முழுமை அடையாத நிலையில் ஐந்தாண்டுகளில் பணி முடிக்க மாநகராட்சி மாமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் அம் ரூத் திட்டத்தின் கீழ் பாதாளச் சாக்க டைத் திட்டம் (பகுதி 2) செயல்படுத் துவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு  மார்ச் 26ஆம் தேதி அனுமதி அளிக் கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பீட் டுத் தொகை ரூ.636.40 கோடியில் மூன்றாண்டுகளில் கட்டுமானப் பணியை நிறைவு செய்வதென்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை கழகம் மூலம், ஆசிய  வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன்  இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ரூ.118.17 கோடி மானியம்  கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட் டது.  பாதாளச் சாக்கடை கால நீடிப்பு அதன்படி 2023ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி கள்  நிறைவடைந்திருக்க வேண் டும். எனினும் கோவிட் பெருந் தொற்று பொது முடக்கம் காரண மாக பணிகளை குறித்த காலத்தில்  முடிப்பதற்கு தாமதம் ஆனது. எனவே கூடுதலாக ஓர் ஆண்டு அவ காசத்தில் பணியை முடிப்பதற்கு அவகாசம் கோரப்பட்டது. அதன் படி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்  தேதி வரை அவகாசம் வழங்கப்பட் டது.  இப்பணிகளை முடித்தால்தான் ஆசிய வளர்ச்சி வங்கியின் மானி யத் தொகை கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கூடுதல் கால  அவகாசத்திலும் பாதாளச் சாக்க டைப் பணி முடியவில்லை. எனவே  கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடை பெற்ற திருப்பூர் மாநகராட்சி மாமன் றக் கூட்டத்தில் இன்னும் ஓர் ஆண்டு  காலம் அவகாசம் வழங்கக் கோரி தீர்மானம் முன்மொழியப்பட்டது. மூன்றாண்டுகளில் முடிக்க  வேண்டிய பணியை, நான்காண்டுக ளில் முடிப்பதாக அவகாசம் பெற் றும் அதிலும் முடிக்க முடியாத நிலையில், தற்போது ஐந்தாண்டு காலத்தில் முடிக்கவும் மாமன்றக்  கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட் டது. குடிநீர்த் திட்டம் கால நீடிப்பு இதேபோல் திருப்பூரில் புதிய  குடிநீர்த் திட்டம் (நான்காவது குடி நீர்த் திட்டம்) செயல்படுத்துவதற் கும் அம்ரூத் திட்டத்தில் ரூ.1120.57 கோடி மதிப்பீட்டில் கடந்த 2020ஆம்  ஆண்டு மார்ச் 23ஆம் தேதி  அனுமதி  அளிக்கப்பட்டது. இத்திட்டத்தை யும் மூன்றாண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனி னும் கோவிட் பொது முடக்கம் கார ணமாக குறித்த காலத்தில் பணியை  முடிக்க இயலவில்லை என்று கூடு தல் கால அவகாசம் கோரப்பட்டது.  அதன்படி 2023ஆம் ஆண்டு முடிக்க  வேண்டிய திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்கப் பட்டது.  இப்போதும் பணி முழுமை பெறாத நிலையில், ஆசிய வளர்ச்சி  வங்கியின் மூலம் கிடைக்க வேண் டிய மானியத் தொகை ரூ.164.23 கோடியை முழுமையாகப் பெறு வதற்கு மேலும் ஓராண்டு கால அவ காசம் கேட்டு கடந்த ஜனவரி 31ஆம்  தேதி திருப்பூர் மாநகராட்சி மாமன் றக் கூட்டத்தில் அனுமதி கோரப்பட் டது. இதற்கும் மாமன்றக் கூட்டத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிகரிக்கும் நிதிச்சுமை திருப்பூர் மாநகராட்சியின் பிர தான இரு திட்டங்களான குடிநீர்த்  திட்டம், பாதாளச் சாக்கடைத் திட் டம் இரண்டிலும் மூன்றாண்டு என  இலக்கு நிர்ணயித்து நான்காண்டுக ளில் முடிப்பதாக அவகாசம் பெற்று  முடிக்க முடியாமல் ஐந்தாண்டுகள்  என அவகாசம் கோரியுள்ளனர். கோவிட் பொது முடக்கம் என்பது  நியாயமான காரணமாக இருந்தா லும், அதற்குப் பிற்பாடுதான் ஓராண்டு கால அவகாசம் பெறப் பட்டது. அப்போதும் பணிகளை முழுமையாக முடிக்காமல் 2025 டிசம்பர் 31க்குள் முடிப்பதற்கு அவகா சம் பெற்றுள்ளனர். இதில் கால தாமதம் என்பது மட் டும் பிரச்சனை அல்ல, இதனால் இரண்டு திட்டங்களுக்கான செல வும் அதிகரித்திருக்கிறது. குறிப் பாக பாதாளச் சாக்கடைத் திட்டத் திற்கான செலவுத் தொகை ரூ.636.40  கோடி என்பதில் இருந்து ரூ.798. 88 கோடியாக அதாவது ரூ.162.48  கோடி அதிகரித்துள்ளது. அதே போல் குடிநீர்த் திட்டத்திற்கான செலவும் ரூ.1120.57 கோடி என்ப தில் இருந்து ரூ.1179.81 கோடியாக,  அதாவது ரூ.59.24 கோடி அதிகமாகி யுள்ளது. திட்டமிட்ட காலத்தில் பணியை முடிக்காததால் ரூ.221.72 கோடி செலவு அதிகரித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி  மற்றும் மானியத்துடன் இத்திட்டம் நிறைவேற்றுவதால் அதன் பல் வேறு நிபந்தனைகளையும் மாநக ராட்சி ஏற்க வேண்டியுள்ளது. என் னென்ன நிபந்தனைகள் விதித்தி ருக்கிறார்கள் என்பதை அரசு நிர்வா கம் வெளிப்படையாகத் தெரிவிக் காவிட்டாலும், கடனையும், கடனுக் கான வட்டியையும் செலுத்த வேண் டியது திருப்பூர் மக்கள் தலையில் தான் வைக்கப்படும் என்பதை  சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.