districts

மனிதனாக இருப்பதற்கு வாசிப்பு அவசியம்

ஈரோடு, ஆக.12- நான் ஏன் வாசிக்கிறேன் என்றால் மனிதனாக இருக்க வேண்டும் என்பதற் காக வாசிக்கிறேன் என ஈரோடு புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற சிந்தைனை அமர்வில், ஊடகவி யலாளர் கார்த்திகேயன் பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் சனி யன்று நடைபெற்ற சிந்தைனை அமர் விற்கு, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் ஊடகவியலா ளர் கார்த்திகேயன் பேசுகையில், 12 ஆம் வகுப்பில் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற நிலை உள் ளது. ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மொழிப்பாடங் கள் முக்கியம். வாழ்வின் விழுமியங்க ளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென் றால் ஒரு குழந்தை மொழி பாடங்களை கட்டாயம் வாசித்தே ஆக வேண்டும்.  வாசிப்பதைவிட, எழுதுவதைவிட, பணம் சம்பாதிப்பதைவிட, வேலை யில் போய் சேருவதைவிட, புகழ், செல் வாக்கு அடைவதைவிட மனிதனாக வாழ்வது முக்கியம். சக மனிதன் மீது இரக்கமும், அக்கறையும், வலியை யும் புரிந்து கொள்ள மொழிப்பாடங் கள் கட்டாயம். சாதிக் கொடுமை, எவ்வ ளவு வறுமையிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை சிறுகதை, நாவல், இலக்கியம் புரிய வைப்பதை விட நாம் எப்படி புரிய வைக்க முடி யும் என்று கேள்வி எழுப்பினார்.   சாதி அடிப்படையிலான பாகுபாடு களைப் போல் மத அடிப்படையிலான பாகுபாடுகளும் அதிகரித்து வருகின் றன. பெண்கள் பக்கம் நிற்பது எவ்வ ளவு அவசியமோ, அதேபோல் சிறுபான் மையினர் பக்கமும் நிற்க வேண்டியது காலத்தின் தேவையாகும். பெரும் பான்மை மக்களின் அரவணைப்பும், பாதுகாப்பு உணர்வும் இருக்கும் வரை தான் சிறுபான்மை மக்களுக்கு பாது காப்பு. அதேபோல மொழி அடிப்ப டையிலான பாகுபாடு. இவை எல்லா வற்றையும் போக்குவதும் தான் கல்வி, என்றார். இறுதியாக நான் ஏன் வாசிக் கிறேன் என்றால், மனிதனாக இருப்ப தற்காக வாசிக்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.