districts

img

மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

உதகை, அக்.22- உதகை மார்க்கெட்டில் மல்லிக்கைப்பூ கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கு விற்பனை யானது.  ஆயுதபூஜையை முன்னிட்டு,  உதகை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க  பொது மக்கள் குவிந்தனர். இதில் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, கரும்பு, சுண்டல் விற்பனையானது. குறிப்பாக பூக்கள், பழங் கள் வாங்க உதகை மார்க் கெட் மற்றும் சாலைகளில் ஞாயிறன்று  பொதுமக்கள் மற்றும் சிறு வியா பாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் அப்பர் பஜார், லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் அதிகளவில் திரண்டனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை முதலே மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதி களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. இதனால் நீண்ட தூரத்திற்கு வாக னங்கள் அணிவகுத்து நின்றதால் பொது மக்கள்  அவதியடைந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் கிலோ ரூ. 1000 விற்ற மல்லிகைப் பூ ஞாயிறன்று ரூ.2  ஆயிரத்திற்கு விற்பனையானது. இதே போல் மற்ற பூக்களும் விலை சற்று விலை உயர்ந்திருந்தன. முல்லை மற்றும் ஜாதிப்பூ கிலோ ரூ.1200-க்கும், செண்டுமல்லி ரூ. 200-க்கும், அரளி ரூ.600-க்கும், சம்பங்கி ரூ. 400-க்கும் விற்பனையானது.  பொரி விலையும் உயர்வு  இதேபோல், நாமக்கல் மாவட்டம், பள்ளி  பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு திடலில் தற்காலிக கடைகள்  அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிபாளை யத்தில் உள்ள விசைத்தறிக்கூடங்கள்,  லேத் பட்டறைகள் மற்றும் வணிக வளாகங் கள் அலங்கரித்து ஆயுதபூஸையை தொழி லாளர்கள் கொண்டாடுவார்கள். இதனை யொட்டி பூ, பொரி உள்ளிட்ட பல பொருட் களில் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொரிக்கடை உரிமையாளர்  நல்லசாமி என்பவர் கூறுகையில், கடந் தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு பூக்கள்  மற்றும் பொரி உள்ளிட்ட பொருட்கள் விலை  அதிகரித்துள்ளது. 50 பக்கா கொண்ட ஒரு  மூட்டை பொரி ரூ.600 முதல் ரூ.700 வரை  விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித் தார்.  மேலும் மேம்பாலம் மற்றும் சாலை விரி வாக்க பணிகள் காரணமாக சாலையோர வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவிற் கான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித் தார்.