ஈரோடு, ஜன.22- சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.857 உயர்ந்து, ரூ.3 ஆயிரத்து 202க்கு ஏலம் போனது. சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் உள்ள மலர்ச் சந்தையில் நாள்தோறும் காலை 7 மணி முதல் மதி யம் 2 மணி வரை ஏலம் நடைபெறும். அதன்படி, சனி யன்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இதில், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.3 ஆயிரத்து 202-க்கும், முல்லை ரூ.1,740-க்கும், காக்கடா ரூ.1,100-க்கும், செண்டுமல்லி ரூ.41-க்கும், பட் டுப்பூ ரூ.64-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கன காம்பரம் ரூ.550-க்கும், சம்பங்கி பூ ரூ.25-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது. இந்நிலையில், வியாழனன்று நடைபெற்ற ஏலத்தில், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 345-க்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.857 விலை உயர்ந்து விற் பனையானது. பனிக்காலம் என்பதால் பூக்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் மல் லிகை விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரி வித்துள்ளனர்.