பள்ளிபாளையம், மே 27- நாமகிரிப்பேட்டை ஊராட்சிக் குட்பட்ட தும்பல்பட்டி கிராமத்தில் சனியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக் கட்டு போட்டியை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலை மையில் ஜல்லிக்கட்டு வீரர்கள், தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான விதிமுறை களுக்குட்பட்டு, அனைத்து விதி முறைகளையும், முறையாக கடை பிடிக்க வேண்டும். மேலும் சாதி, இன, வட்டார பாகுபாடின்றி அனைத்து வீரர் களும், ஒற்றுமையாக செயல்பட்டு, காளைகளை துன்புறுத்தாமல், அமைதியாக ஜல்லிக்கட்டை விளையாடுவோம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டி யில், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 300 காளைகள் வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப் பட்டன. மாடுபிடி வீரர்களுக்கான 6 மருத்துவக்குழு, காளைகளுக் கான 8 கால்நடை மருத்துவக்குழு, காவல் துறையினர் பணியில் ஈடு படுத்தப்பட்டனர். பின்னர், ஜல்லிக்கட்டு போட்டி யில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர் களுக்கும், மாட்டின் உரிமையாளர் களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்வில், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.இராம சுவாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) சே.சுகந்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) மரு. நடராஜன், ராசிபுரம் வட்டாட் சியர் சுரேஷ், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பால முருகன் உட்பட அரசு அலுவலர் கள், வருவாய்த் துறை, காவல் துறை, ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண் டனர்.