ஜாக்டோ ஜியோ பெருந்திரள் போராட்டம் – கைது
சேலம், ஜன 30 - புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ திய திட்டத்தை தமிழக அரசு உட னடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்ட மைப்பான ஜாக்டோ ஜியோ சார் பில் ஆயிரக்கணக்கான ஊழி யர்கள் பங்கேற்ற பெருந்திரள் போராட்டங்கள் நடைபெற்றது. பங்களிப்புடன் கூடிய ஓய்வூ தியத் திட்டத்தினைக் கை விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத் தினையே அமல்படுத்திட வேண் டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, இடை நிலை ஆசிரியர்களுக்கும், உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நி லைப் பள்ளி தலைமையாசிரி யர்களுக்கும், முதுகலை ஆசிரி யர்களுக்கும், உடற்கல்வி இயக் குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரி யர்களுக்கும் இணையான ஊதி யம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரி யர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு, (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள் ளிகளில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களை பட்ட தாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செய லாளர்கள், ஊர்ப்புற நூலகர் கள். கல்வித்துறையில் பணிமாற் றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக் கூலி அடிப்படையில் பணியாற் றும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள்,
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் கள் ஆகியோருக்கு வரையறுக் கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வித் துறை யில் பணியாற்றும் பணியாளர் கள், ஆசிரியர்கள், தொழிற் கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந் தரம் செய்யப்படவேண்டும். அர சின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலி யாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பி டுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழி யர்கள் – ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடி யாக வழங்கிட வேண்டும். 2002 முதல் 2004 வரை தொகுப்பூ தியத்தில் நியமனம் செய்யப் பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழி யர்கள் மற்றும் அரசுப் பணியா ளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறைப்ப டுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர் களை நியமனம் செய்வதை உட னடியாக தடை செய்திட வேண் டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழு வதும் பெருந்திரள் மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு அறைகூவல் விடுத்தது.
இதன்ஒருபகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் பிரம் மாண்ட மறியல் போராட்டம் நடை பெற்றது. ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தலைவர் திருவேரங்கன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்று கைதாகி னர். தருமபுரி இதேபோன்று, ஜாக்டோ ஜியோ சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறி யல் போராட்டம் நடைபெற் றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் எம்.சுருளிநா தன், பி.எம்.கெளரன், இராசா.ஆனந்தன், கே.பாஸ்கரன், க.சாமிநாதன், பெஞ்சமின் ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலதுணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி தமிழக தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கோ.காம ராஜ், தமிழ்நாடு உயர்நிலை மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பி.துரை ராஜ், தமிழ்நாடு அரசு பணியா ளர் சங்க மாவட்டச் செயலாளர் கோ.குமார், சத்துணவு ஊழி யர் சங்க மாநிலச் செயலா ளர் பெ.மகேஸ்வரி உள்ளிட் டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதனைத்தொ டர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
ஜாக்டோ ஜியோ சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெக நாதன், தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சி.அரசு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்டச் செய லாளர் க.சாலமன்ராஜ் ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில், அரசு பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ராதாகிருஷ்ணன், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் மா.ராஜசேகரன், மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்டத் தலை வர் எம். கலைவாணன் உள் ளிட்டட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் மறியலில் பங்கேற்று கைதாகினர்.
ஈரோடு
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் சாலை மறியல் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ ஒருங் ணைப்பாளர் ச.விஜயமனோ கரன் தலைமையில் அரசு ஊழி யர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரண்டனர். துறைவாரியான ஒருங்கிணைப்பாளர்கள் சர வணன், முத்துராமசாமி மற்றும் அரசு ஊழியர் சங்க மாநில துணைச் செயலாளர் மு.சீனிவா சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை முழக் கங்களுடன் திருமகன் ஈவெரா சாலையில் ப.செ.பார்க் நோக்கி வந்த போராட்டக்காரர்களை தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர். மாநிலம் முழுவதும் நடை பெற்ற போராட்டத்தின் ஒரு பகுதி யாக சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட் டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். முன்னதாக போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கூறுகையில், தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்க ளின் கோரிக்கையை நிறைவேற் றாவிட்டால், அடுத்த கட்டமாக பிப். 05 முதல் 09முடிய அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவுதிரட்டுவது, பிப்ரவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது, பிப். 15ஆம் தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது, பிப். 26 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடி வெடுத்துள்ளதாக தெரிவித்த னர்.
திருப்பூர்
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் (ஜாக் டோ ஜியோ) திருப்பூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவ்வா யன்று இந்த மறியல் போராட் டத்தை எழுச்சியுடன் நடத்தினர். ஜாக்டோ ஜியோ திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் க.ராஜேந்திரன், செ.பால சுப்பிரமணியம் சோ.சந்திர சேகரன், த.தங்கபாண்டியன், A.ராணி, மா.பாலசுப்பிரமணியன் மற்றும் செய்தித் தொடர்பாளர் வேலுமணி ஆகியோர் தலை மையில் நடைபெற்ற இப்போராட் டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். பல்லடம் சாலையில் நடைபெற்ற மறி யல் போராட்டத்தையடுத்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலை யில். 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கா னோரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்த னர். பின்னர், மாலையில் அனை வரையும் விடுவித்தனர்.