districts

img

ஊதிய முரண்பாட்டினை களைந்திடுக: ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.1- ஊதிய முரண்பாடுகளை களைய நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசின் ஊழி யர்களுக்கு இணையான ஊதியம் வழங்க  வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய  வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத்துறை களில் தனியார் முகமை மூலம் பணியா ளர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ச.விஜய மனோகரன், பி.சரவணன், பி.எஸ்.வீராகார்த் திக், அ.மதியழகன், அ.ஆறுமுகம், பி.வெங்க டேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.முத்து ராமசாமி தொடக்க உரையாற்றினார். முடி வில், மாநில ஒருங்கிணைப்பாளர் ச.நேரு நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பி.எம்.கெளரன், ராசா.ஆனந்தன், பாஸ்கரன், சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ -  ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, வேளாண் மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ஜெயவேல், சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தேவகி, நில அளவை ஒன்றிப்பின் மாநிலச் செயலாளர் ரா.கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

இதேபோல் கோவை ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் அரசு தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொரு ளாளர் அருளானந்தம், டிஎன்டிஎப் மாவட்டச்  செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித் தனர். தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வீரமணி, தமிழக ஆசி ரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் விஜய லட்சுமி, மாவட்டத் தலைவர் ராஜசேகர் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், மாவட்டப் பொருளாளர் நட ராஜன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வெ.அர்த்தநாரி தலைமை  வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர்  சங்க நிர்வாகி அன்பழகன், தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செய லாளர் திருமுருகன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜான், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாயகி ருஷ்ணன், ஜாக்டோ - ஜியோ நிர்வாகி சந்திர சேகர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் எஸ். கணேசன் உள்ளிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திரளானோர் பங்கேற்றனர்.