திருப்பூர், செப். 4 - திருப்பூரை அடுத்த பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 51 ஆவது இந்திய சர்வதேச பின்ன லாடை கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப்யாதவ் புதன்கிழமைதுவங்கி வைத்தார். இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். தொடக்க விழா நிகழ் வில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், ஆயத்த ஆடை ஏற்று மதி மேம்பாட்டு கழகத் தென்பிராந் திய தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கண்காட் சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கு களை அவர்கள் பார்வையிட்டனர். திருப்பூரை சேர்ந்த முன்னணி ஏற்று மதி நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெ ரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுக ளில் இருந்து வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங் கேற்கின்றன. வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில், ஆடை உற்பத்தி யில் இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஆடைகள் தயாரிப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரும் வகையில், கண் காட்சி அமைந்துள்ளதாக ஆயத்த ஆடைஏற்றுமதி மேம்பாட்டு கழகத் தின் தென் பிராந்திய தலைவர் ஏ.சக்தி வேல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஏ.சக்திவேல் கூறியதாவது: பூமியை பாதுகாக்கும் வகையில், ஆடை உற் பத்தியில் மாசை குறைத்து திருப்பூர் தொடர்ந்து இயங்கி வருகிறது. வெளி நாட்டை சேர்ந்த 40 பையர்கள் (வர்த்தகர் கள்) வருகை தர உள்ளனர். அதேபோல் இதுவரை இல்லாத வகையில் மெக்சிகோ நாட்டில் இருந் தும் இந்த கண்காட்சிக்கு வருகிறார் கள். செயற்கை நூலிழை ஏற்றுமதி உள்ளிட்ட எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு,இந்த கண்காட் சியை விரிவாக திட்டமிட்டு அமைத் துள்ளோம். உலக அளவில் திருப்பூர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது, என்று கூறினார். தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பேசும்போது, “உற்பத்தி யில் பசுமையை பிரதானமாக கொண்டு திருப்பூர் இயங்கி வருகிறது. ஏற்றும தியை போலவே, உள்நாட்டு உற்பத்தி யிலும் ரூ. 25 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. ஆடை உற்பத்தியில் தொடர்ந்து கிரீன் டிரெண்ட் என்பதை நோக்கி செயல்படுகிறது. பின்ன லாடைத் தொழிலில் 80 சதவீதம் கடுமை யாக உழைக்கிறார்கள். பெண்கள் ஆற்றலில், இந்தியாவுக்கு வழிகாட்டும் தொழில் நகராக திருப்பூர் உள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த பையர்கள் இதில் பங்கேற்கிறார்கள். புதிய ஜவுளிக் கொள்கையில் மதிப்புள்ள பல்வேறு புதிய தொழில் சங்கிலி பிணைப்புகள் இருக்கும். இங்கிருந்து யாரும் தொழிலை வேறு மாநிலங்க ளுக்கு கொண்டு செல்ல முடியாது. அந்தளவுக்கு இங்கு தொழில் முன்னேற்றம் மற்றும் முன்னோடி யாக இருந்து வருகிறது. இந்த தொழிலை தமிழ்நாடு அரசு அடுத் தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கை களுக்கும், உறுதுணையாக இருக்கும், என்று கூறினார். இந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடக்கிறது.