குலுக்கல் முறையில் பரிசுத் திட்டம் நடத்துவது தவறு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5000 இழப்பீடு
நாமக்கல், டிச.19- விற்பனையை அதிகரிக்க குலுக்கல் முறையில் பரிசுத் திட்டம் நடத்துவது தவறு என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை யில் வசிப்பவர் சுப்புராயன் (78). இவர், திருச்செங்கோடு சாலையில் உள்ள கூட்டு றவு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான, இந்தி யன் ஆயில் பெட்ரோல் பங்கில், அவரது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி யுள்ளார். இதையடுத்து, பெட்ரோல் நிரப்பிய சுப்புராயனுக்கு இலவசமாக குங்குமம் வார இதழ் ஒன்றும், பரிசு கூப்பன் ஒன்றையும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வழங்கியுள் ளனர். அந்த பரிசுக் கூப்பனில், மூன்று கேள்வி கள் கேட்கப்பட்டு, அதற்கு சரியான பதில் அளிக்கும் 8 நபர்களுக்கு குலுக்கல் முறை யில் ரூபாய் ஒரு லட்சத்துக்கான வீட்டு உப யோக பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அந்த சீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விற்பனையை அதிகரிப்ப தற்காக குலுக்கல் மூலம் பரிசுகளை வழங்கு வது தவறு எனவும், தமக்கு ரூ. 50,000 இழப் பீடு வழங்குமாறும் சுப்பராயன் கடந்த 2018 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந் தார். இதன் மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், விற்பனையை அதி கரிக்க குலுக்கல் முறையில் பரிசு வழங்கு வதாக கூறி கூப்பன்கள் வழங்குவது நேர்மையற்ற வணிக நடைமுறை. இதனால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கின் செலவு தொகை யாக ரூபாய் 5 ஆயிரத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.
ஆசனுரில் து. மின்நிலையம் அமைக்க கோரிக்கை
ஈரோடு, டிச.19- தொடரும் மின்வெட்டால் ஆசனூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம், ஆச னூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சத்தி யமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். முறையான மின்சாரம் இல் லாததால், இப்பகுதி மக்கள் தொடர்ந்து அவ தியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழில் என்பதால், மின் சாரத்தை நம்பியே பயிர் சாகுபடி செய்ய வேண்டியுள்ளது. தோட்டங்களுக்கு தண் ணீர் பாய்ச்சவும், வனவிலங்குகள் தோட் டங்களில் நுழையாமல் தடுக்கவும் மின் விளக்குகளை எரியவிட்டு விவசாயம் செய் யப்படுகிறது. இந்நிலையில், சிறிய அள விலான மழை பெய்தால் கூட ஆசனூர் பகுதி யில் மின்தடை ஏற்படுகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அவதி யடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகா ரிகளிடம் பலமுறை புகாரளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சீரான மின் விநியோகம் செய்ய ஆசனூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
காவல்துறை சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
கோவை, டிச.19- மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்க ளுக்கு கருமத்தம்பட்டி போலீசார் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர். தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், இயல்பு வாழ்கை முடங்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். பெரும்பாலான இடங்களில் வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப் பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவையை அடுத்த கருமத்தம்பட்டி காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து மூன்றாயிரம் குடிநீர் பாட்டில், இருபத்தி ஆறு பெட்டி பிஸ்கட் பாக்கெட், பால் பவுடர், தீப்பெட்டிகள், சேலை, துண்டு என பல்வேறு நிவாரணப் பொருட்களை, பாதிக் கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைத்தனர்.
ஆடு திருடிய இருவர் கைது
கோபி, டிச.19- ஈரோடு, கோபிசெட்டிபா ளையம் அடுத்த டி.என்பா ளையம் அருகே உள்ளது கரட்டூர் பகுதி. இப்பகுதி யில் சாலையோரமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடு களை, காரில் வந்த திருடர் கள் திருடி சென்றதாக கூறப் படுகிறது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள், இரு வரை பிடித்தனர். இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
மனு அளிக்க வந்த முதியவர் பலி
கோவை, டிச.19- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த முதியவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்ரமணியம். இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந் திருந்தார். பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகள் இரு வரும் அலுவலகத்தில் உள்ள முதல் மாடியில் மனு அளிக்க காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலசுப்ரமணியம் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் கூச்சலி டவே அருகில் இருந்தவர்கள் 108 அவசர ஊர்திக்கு அழைத்த னர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் முதலுதவி பலனளிக்காததால், பால சுப்ரமணியம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, பாலசுப்ரமணியத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய் தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலருக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மக்கள் ஆவேசம்
உதகை, டிச.19- பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்க ஜெகதளா பேரூராட்சி 5 ஆவது வார்டு கவுன்சிலருக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து, அவரது வார்டை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேருராட்சி, 5 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளவர் திலீப். இவர் கடந்த டிச.12 ஆம் தேதியன்று நடை பெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத் தின்போது, தனது வார்டு பகுதிக்குத் தேவையான கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசுகையில், கடுமையான வாா்த்தைகளை பயன்படுத்தியதாக வும், மன்றத்தை அவமதிக்கும் வகை யில் மற்ற உறுப்பினர்களை பேசவி டாமல் இடையூறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, திலீப் பேரூராட்சி மன்றக் கூட்டத் தில் 2 மாதங்களுக்கு பங்கேற்க தடை விதித்து கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், திலீப் மீதான நடவடிக்கையைக் கண் டித்து, ஜெகதளா ஊர் தலைவர் ராமன் தலைமையில், பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்க ளன்று முற்றுகையிட்டனர். அப் போது, கவுன்சிலர் திலீப் மீதான இடைநீக்க தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவரை மீண்டும் மக்கள் பணி செய்ய அனும திக்க வேண்டும் என்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் பங்கஜத்திடம் வலி யுறுத்தினர். அதற்கு, மன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடனே திலீப் மீது இடைநீக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டதாகவும், அவர்களுடன் பேசிய பின்னர் முடிவு தெரிவிப்ப தாகவும் தலைவர் பங்கஜம் தெரி வித்தார். அப்போது, 2 நாட்களுக் குள் திலீப் மீதான நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் போராட்டத் தில் ஈடுபடுவோம் எனக்கூறி பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.
வாக்காளர் விழிப்புணர்வு மையங்கள்
ஈரோடு, டிச.19- 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து பயிற்சி மற்றும் விழிப் புணர்வு பணிக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபிசெட்டிபளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் 115 இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஈரோடு வருவாய் கோட் டாட்சியரிடம் 108 இயந்திரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவல கம், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பவானி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அந்தியூர் வருவாய் வட் டாட்சியர் அலுவலகம், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சி யர் அலுவலகம் ஆகிய 9 இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட உள்ளன. விழிப்புணர்வு மையத்தில் அலுவ லக நேரங்களில் பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்தும், அதிலுள்ள சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரு மான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஆயுட்கால வரியை ரத்து செய்திடுக வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம்
சேலம், டிச.19- கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடகை வாகனங்களுக்கு ஆயுட்கால வரி, முன்பு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 3500 முதல் 4000 ரூபாய் வரை செலுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு கடந்த மாதம் வாடகை வாகனங்களுக்கான ஆயுட்கால வரியை 15 ஆண்டுகளுக்கு ஒரே தொகையாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ஒவ்வொரு வாகனங் களுக்கும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை ஆயுட்கால வரி செலுத்தும் நிலை உள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில், வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் ஆயுட்கால வரியை ஒரே தவணையாக செலுத் தும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்தி நூதன முறையில் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் திரளான வாடகை கார் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
நாளை மின்தடை
நாமக்கல், டிச.19- நாமக்கல் மாவட்டம், பல் லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் வியாழ னன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் பல்லக்காபாளையம், ஆலத் தூர், புதுப்பாளையம், மலை யடிபாளையம், மஞ்சுபாளை யம், எக்ஸல் கல்லூரி, குமார பாளையம் ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் வியா ழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.