அவிநாசி,டிச. 31- சாலை வசதி இல்லாத நிலை யில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் தவித்த சம்ப வம் அவிநாசி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி ஒன்றியம் புதுப்பா ளையம் ஊராட்சிக்கு உட்பட்டது வஞ்சிபாளையம். இங்குள்ள சென் னிமலை கவுண்டர் நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியினருக்கு உரிய சாலை வசதி இல்லை. ஏற் கனவே உள்ள சாலை, சாமந்தக் கோட்டை முதல் சென்னிமலை கவுண்ண்டர் நகர் வரை கரடு,முர டான மண்சாலையாக உள்ளது. இந் தப் பாதை வழியாக வஞ்சிபாளை யம் நகர் பகுதியில் உள்ள மருத்துவ மனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு செல்வது என்றால் கூட குறைந்தபட்சம் மூன்று கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியதாக உள்ளது. எனவே, இப்பகுதி மக் கள் ரயில்வே வழித்தடத்தை பயன் படுத்தி வந்தனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்த ஏதுவான வழித்த டத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில், இப்பகுதியினர் பயன்ப டுத்தி வந்த ரயில்வே வழித்தடத்தை யும், ரயில்வே நிர்வாகம் திடீரென அடைத்து விட்டது. இதனையடுத்து, கரடு, முரடான மண் சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என கடந்த ஒரு வருட காலமாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி ஊராட்சி ஒன்றிய கூட்டங்களில் முறையிட்டு வந்தார். இதனைத் தொர்ந்து, சமந்தங்கோட்டை முதல் சென்னிமலை கவுண்டர் நகர் பகு திக்கு சாலையை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆனால், பணிகள் துவங்காமலே இருந்து வந்தது. இதன்பின், மார்க்சிஸ்ட் கட்சியினர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிடு வது, நடைபயண இயக்கத்தை மேற்கொண்டது, ஆட்சியரிடம் மனு அளிப்பது என தொடர்ந்து இயக் கங்களை நடத்தி வந்தது. தொடர்ச்சி யாக குரல் எழுப்பி வந்த நிலை யில், தற்போது, சாலை அமைக்கி றோம் என 20 நாட்களுக்கு மேலாக கற்களை மட்டும் கொட்டி வைத் துள்ளனர். இந்நிலையில், சென்னிமலை கவுண்டர் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் செவ்வாயன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இறந்த சட லத்தை எடுத்துச் செல்ல பாதை இல்லாமல் உறவினர்கள் அவதிக் குள்ளாகினர். இதனையறிந்த, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் குமரவேல், ஹனிபா, மூர்த்தி, தேவராஜ், கதிர் வேல், சதீஷ் உள்ளிட்டோர் அப்ப குதி மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை ஆரம்பித்த போராட்டம் மாலை வரை நீடித்த நிலையில், தகவல் அறிந்த திருமுருகன் பூண்டி காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலு வலக அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், 30 நாட்களுக்குள் சாலைப் பணிகளை முடித்து தருவதாக உறுதி அளித்த னர். இதனையேற்று இறந்தவரின் உடலை அடக்கம் செய்து அனை வரும் கலைந்து சென்றனர். அதி காரிகள் உறுதி அளித்தபடி சாலை பணிகளை விரைந்து முடிக்காவிட் டால், அனைத்து பகுதி மக்களை யும் இணைத்து பெரும் போராட்ட த் தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.