மக்களை தேடி மருத்துவம் என்ற திட்ட ஊழியர்களை பழி வாங்கலில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரித்து வழக்கம் போல் ஐந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப அழைக்கவேண்டி கோவை ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு கோவை மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எம்.மலர்விழி, மற்றும் சங்க நிர்வாகிகள் நாகலட்சுமி, ரஜீனா, சோனியா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.