districts

img

10 ஆண்டுகளாக மூடி கிடக்கும் நூலகம் பழைய பொருட்கள் கிடங்காக மாறிய அவலம்!

கோவை, ஜன.16- சுல்தானிபுரம் கிராமத்தில் 10 ஆண்டுகளாக மூடி கிடக்கும் நூல கம் பழைய பொருட்கள் கிடங்காக  மாறியதால், மீண்டும் பயன்பாட் டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். கோவை மாவட்டம், சோமை யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுல்தானிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சிக்கு சொந்த மான நூலகம் கடந்த 10 ஆண்டுக ளுக்கும் மேலாக திறக்கப்படாமல்  மோசமான நிலையில் காட்சியளிக் கிறது. ஆரம்பத்தில் அந்த பொது நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ, மாணவிகள் பயன்படுத்தி  வந்தனர். ஆனால், நீண்ட நாட்க ளாக நூலகம் திறக்கப்படாமல் அப்படியே மூடிக்கிடப்பதால், பழைய பொருட்கள் சேமிக்க வைக் கும் கிடங்காக மாறி உள்ளது. இதுகுறித்து பேசிய ஆணி வேர் அமைப்பு நிறுவனர் இரா.சாந்தகுமார் கூறியதாவது, சோமையம்பாளையம் கிராம ஊராட்சியில் பள்ளி கல்லூரி செல் லும் ஏராளமான மாணவ, மாணவி கள் உள்ளனர். அதில் பலர் போட் டித் தேர்வுக்காக தயாராகி வரு கின்றனர். சோமையம்பாளையம் ஊராட்சியில் உள்ள சுல்தானிபுரம் பொது நூலகம் சுமார் 10 ஆண்டு களுக்கும் மேலாக திறக்கப்படா மல் இருப்பதால், இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வேறு  பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல்  ஏற்பட்டுள்ளது. மேலும், செல் போன் செயலிகள் மூலம் புத்தகங் கள் படிக்க வேண்டிய கட்டாயத் தில் உள்ளனர். நீண்ட நாட்களாக  திறக்கப்படாமல் உள்ள இந்த பொது நூலகம் பழைய பொருட் களை வைக்கும் கிடங்காக மாற்றப் பட்டுள்ளது. எனவே இந்நூல கத்தை மீண்டும் சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரி வித்தார்.