கோவை, ஜூன் 10- இறந்த உடலை புதைக்க வழியில்லாமல் உள்ள தலித் பகுதி மக்களுக்கு பொள்ளாச்சி நல்லூத்துக்குளியில், மயானத் திற்கு நிலம் கொடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பொள்ளாச்சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அடுத்த நல் லூத்துக்குளி கிராமத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட அருந்ததிய மக்க ளின் குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள தலித் மக்கள் வயது முதிர்ந்தோ, உடல்நலிவுற்றோ இறந்தால் புதைக்க வழியில்லா மல் பெரும் அவதிப்பட்டு வரு கின்றனர். தற்போது, பயன்படுத்தி வரும் நிலம் மிகச்சிறியதாக உள் ளது. ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்தால் புதைக்க வழி யில்லாமல் இறந்தவர் உடலை சுமந்து கொண்டு, புதைக்க இடம் தேடி அலையும் அவல நிலை உள்ளது. மயான வசதி வேண்டும் என்று தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரத்தில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்த மூன்று பேர் இறந்த நிலையில், புதைக்க வழியில்லாமல் அவ திப்பட்டனர். தலித் அருந்ததிய மக்களின் உணர்வுகளை உள் வாங்கிய மார்க்சிஸ்ட் கட்சி, நல் லூத்துக்குளியில் மயான வசதி செய்துதரப்பட வேண்டும் என வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பொள்ளாச்சி தாலுகா குழு உறுப்பினர் மகா லிங்கம் தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசன், விவசாய தொழிலாளர் சங்கத் தின் பட்டீஸ்வரன், வாலிபர் சங் கத்தின் அழகர், மாதர் சங்கத்தின் சித்ரா உள்ளிட்டோர் கோரிக்கை கள் குறித்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஏராளமானோர் பங்கேற்ற னர்.