districts

img

பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க எழுச்சி நாள் கருத்தரங்கில் அரசு ஊழியர்கள் உறுதியேற்பு

 தாராபுரம்,  ஜூலை 2-  தாராபுரத்தில் நடைபெற்ற எழுச்சி நாள் கருத்தரங்கில் அரசு ஊழி யர்களின் கோரிக்கைகளை நெஞ்சு ரத்தோடு ஏந்துவோம் என மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன் பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் எழுச்சிநாள் கருத்தரங்கம் தாரா புரம் வருவாய்த்துறை அலுவலர்கள்  சங்க கட்டிடத்தில் சங்கத்தின் மாவட்ட  தலைவர் ராணி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கள் எஸ்.முருகதாஸ், எம்.ராமசாமி,  எம்.எஸ்,அன்வருல்ஹக், பி.பாக்கி யம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் கி.மேகலிங்கம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மா.பாலசுப்பிரமணியம் அரசு ஊழி யர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.   மாநிலச் செயலாளர் அண்ணா குபேரன் பேசுகையில், 2003 இல் ஓய் வுக்கால பலன்கள், பணிக்கொடை, பணிக்கான சரண் விடுப்பு ஊதியம்  உள்ளிட்ட ஏராளமான உரிமைகளை  அன்றைய அதிமுக அரசு பறித்த போது உரிமை பறிப்பிற்கெதிராக அரசு ஊழியர்கள் போராடியதும், உரிமை பறிப்பிற்கெதிராக போரா டிய அரசு ஊழியர்கள் மீது எஸ்மா,  டெஸ்மா போன்ற கொடுஞ்சட்டங் கள் பாய்ந்தது.

அரசின் கொடுங்கரங் களால் 1.75 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது, அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மீது  வழக்குப் போடப்பட்டது. மேலும் தொடர் போராட்டம் நடத்தி அனைத்து அரசு ஊழியர்களையும் பாதுகாத்து மீண்டும் பணியமர்த்திப் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெ டுக்க அடித்தளமிட்ட இந்த நாள்  எழுச்சி நாளாக நினைவு கூறப்படுகி றது. இந்த நன்னாளில் எதிர்வரும் காலத்தில் புதிய ஓய்வூதியம் திட்டத் தைத் திரும்பப் பெறச் செய்து பழைய  ஓய்வூதியம் திட்டத்தைப் பெற்றிட வும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீதம் அகவிலைப் படியைத் தமிழக அரசு ஊழியர்களும்  பெற்றிட, சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப் புற நூலகர்கள் எம்ஆர்பி செவிலியர் கள் காலமுறை ஊதியம் பெற்றிடவும் சாலைப்பணியாளர்களின் 41 மாத  பணிநீக்க காலத்தை பணிக்காலமாக  முறைப்படுத்தி ஆணை பெற்றிட, அரசுத் துறைகளில் காலியாக உள்ள  நான்கரை லட்சம் பணியிடங்களில் வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திட நெஞ்சுரத்தோடு உறுதி ஏற் போம் எனப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர்கள் ஆர்.ராமன், ஏ. ராஜேஸ்வரி, தா.வைரமுத்து உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர். இறுதியாக மாவட்ட பொருளா ளர் எஸ்.முருகசாமி நன்றி தெரிவித் தார்.