districts

வெல்லத்தில் கலப்படம்: 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கல்

நாமக்கல், ஜன.7- நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு துறை சர்க் கரை தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்  மாவட்டம் பரமத்திவேலூர், அண்ணா நகர் மற்றும்  ஜேடர்பாளையத்தில் உள்ளயிட்ட இடங்களில் வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகி றது. இங்கு சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கப் படுவதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவ லர் அருண் தலைமையில் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும்  அலுவலர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல் படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலை களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், சர்க்கரை இருப்பு, வேதிப் பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய் யப்பட்டது. ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ்  வழங்கப்பட்டுள்ளது. தரம் குறைவாக தயாரிக்கப் பட்ட வெல்லம், நாட்டு சர்க்கரை மற்றும் கலப்படம்  செய்ய வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ சர்க்கரை,  வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோத னைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் கூறுகையில், பிளாஸ்டிக்  போன்றவற்றை எரிபொருளாக ஆலைகளில் பயன்படுத்தக் கூடாது. மேலும் வெல்லம் தயா ரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலை கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த  ஆய்வு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெ றும் என தெரிவித்துள்ளனர்.