கோவை, டிச.31- கோவை மாவட்டத்தில் 2164 பேருக்கு தனிநபர் மற்றும் விவசாய வன அனுபவ உரிமை பட்டா வழங் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத் தில் உள்ள வனப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் மற்றும் புலையரின் மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி, குடியி ருப்பு மற்றும் நில அனுபவ விஸ்தீர ணம் ஆகிய விவரங்கள் அடிப்படை யில் தனிநபர் அனுபவ உரிமை மற்றும் சமூக வன உரிமைகள் வழங்கப் பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 68 வனக் குடியிருப்பு பகுதி கள் அமைந்துள்ளன அதில் இருளர், காடர், முதுவர், மலசர் மலைமலசர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அல் லாத புலையர் ஆகிய மலைவாழ் மக்க ளின் 2559 குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். ஒவ்வொரு மலைவாழ் கிரா மங்களிலும் அக்கிராமத்திற்கென கிராம அளவிலான கிராமசபா அமைக் கப்பட்டு, அக்கிராமங்களில் வசிப்போ ருக்கு வன உரிமைச் சட்டத்தின்படி, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நபர்க ளுக்கு மட்டும் வன அனுபவ உரிமை வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனடிப்படையில் தீர்மானங்கள், வருவாய்துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகள் அடங் கிய கோட்ட அளவிலான குழுவில் ஒப்பு தல் பெறப்பட்டு, மாவட்ட வன உரிமைக் குழுவினரால் விவாதிக்கப்பட்டு ஒப்பு தல் வழங்கப்பட்டு, வன நில அனுபவ உரிமை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட் டத்தில் இதுவரை 2164 தனிநபர் வீடு மற்றும் விவசாய வன அனுபவ உரிமை பட்டாக்கள் வழங்கப்பட்டுள் ளன. இதன்மூலம் மலைவாழ் மக்கள் சிறுவன மகசூல் சேகரம் செய்திடவும், பாரம்பரிய கோவில்கள், ஆறுகள், வழித்தடங்கள் மயானங்கள் மற்றும் கலாச்சார தொடர்பான வனப்பகுதி களை பயன்படுத்திக் கொள்ளவும் வழி வகுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப் பட்டுள்ளது.